வெள்ளி, 8 ஜூலை, 2016

இராசி கற்களின் பலன் அறிவோம்!

            இராசி கற்கள் மற்றும் அதன் பலன்கள்   இராசி கற்கள் என்பது இன்றைய காலத்தில் பலரது நம்பிக்கையாகி வருகிறது. சரியான இராசி கல்லை நாம் அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமல்லது ஏற்றங்களும் உண்டாகும்.
          இராசிக்கல் நமது உடலையும் மனதையும் நமது இராசி கிரகத்துக்கு ஏற்ப ஒருங்கிணைக்க வைத்து நமக்கு நன்மைகள் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால் இராசிக்கல்லை தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எந்தெந்த இராசிக்காரர்களுக்கு எந்தெந்த இராசி கல் பொருத்தமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்று. நமது இராசிக்கு பொருத்தமில்லாத இராசி கல்லை நாம் அணிவதன் மூலம் நன்மைகள் நடக்காதது மட்டுமல்ல சில சமயம் சில ஆபத்தான விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம். எனவே, எந்தெந்த இராசிக்கு எந்தெந்த இராசிக் கற்கள் பொருத்தமானவை என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
        இராசி மற்றும் கற்கள்:
        இராசி            கற்கள்
        மேஷம்           பவளம்
        ரிஷபம்          வைரம்
        மிதுனம்         மரகதம்
        கடகம்             முத்து
        சிம்மம்           மாணிக்கம்
        கன்னி            மரகதம்
        துலாம்            வைரம்
       விருச்சிகம்      பவளம்
       தனுசு               கனக புஷ்பராகம்
       மகரம்               நீலக்கல்
       கும்பம்             நீலக்கல்
       மீனம்               கனக புஷ்பராகம்
        ராசி கற்களின் பலன்கள் :
       மேஷ ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிஷ்டம் உண்டாகும்.
          ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
            மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிஷ்டத்தையும் அளிக்க வல்லது.
        கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும், மகிழ்ச்சியும், செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.

         சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிஷ்டசாலியாகலாம்.
              கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிஷ்டத்தையும் அளிக்க வல்லது.
             துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

            விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிஷ்டம் உண்டாகும். 

            தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
             மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது.
            கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது.
           மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
        அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக