திங்கள், 30 மே, 2016

ஆதாரம் ஏழுக்கும் மூலாதாரமே முதல்

ஐந்து பூதங்களாகிய நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம்,சேர்ந்து உருவான ஒன்றை பிரபஞ்சம் என்கிறோம்.பஞ்சம் என்றால் வடமொழியில் ஐந்து என்று பொருள்.'பிர' என்பது கடவுள் கருணையால் என்று உணரப்படும்.ஐந்து பூதங்கள்,கடவுள் கருணையால் சேர்ந்து உருவானது பிரபஞ்சம்.
           அதனுள்ளே இருக்கும் நாம் மெய்,வாய்,மூக்கு,கண்,செவி, என்கிற ஐந்து பொறிகள் சேர்ந்து உருவானவர்கள்.இந்த ஐந்தையும் ஆளும் மனம் ஆறாவது அறிவு.இதை உடையவர் மனிதர்.அந்த ஆறாம் அறிவையும் கடந்து .உடம்பையும் கடந்து ஏழாம் நிலையில் நிற்க்க முடியும்.அப்படி நிற்கும் நிலையே தெய்வநிலை.
           அப்படியான ஏழு என்ற எண் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.தெய்வ நியதிகள் ஏழாக வகுக்கப்பட்டு இருப்பதாலேயே கிழமைகள் ஏழு உண்டாயின.வடமொழியில் சப்த என்றால் ஏழு என்று பொருள்.தெய்வீகமானவற்றை .சப்த ரிஷிகள்,சப்த சாகரம்,சப் கன்னிகை,சப்த நாடிகள்,சப்த லோகங்கள்,சப்த கோடி மந்திரங்கள்,என்று ஏழாகவே வகுத்தனர்கள்.மனிதன் தன் புறக்கண்ணை கொண்டு கண்டறியும் வானவில்லின் நிறங்கள் ஏழு.சப்த என்ற சொல்லிற்க்கு வடமொழியில் ஒலி என்று பொருளும் உண்டு.அதனால் ஒலியை உலகில் (சரிகமபதநி) என்று.சப்த ஸ்வரங்கள் என்று.ஏழாக வகுத்தனர்.சட்சமம்,ரிஷபம்,காந்தாரம்,மத்யமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம் என்று கர்நாடக சங்கீதம் ஏழாகவே பிரிகிறது.
          தமிழிசையும் குரல்,உழை,கைக்கிளை,துத்தம்,இளி,விளரி,தாரம் என்று ஏழாகவே இருக்கிறது.புராணங்கள் மேல் உலகம் ஏழு கீழ் உலகம் ஏழு என்றும்.மனிதப் பிறவி ஏழு என்கிறது.உயிர்க்குலப் படைப்பை ஆராய்ந்தவர்கள் உயிரினத்தை தாவரங்கள்.நீர்வாழ்வன.ஊர்வன.பறப்பன.விலங்குகள்.மக்கள்.தேவர் என்று ஏழாகவே வகுத்தனர்.
         நம் உடலின் ஆற்றலுக்குக் காரனமான தாதுக்கள்.நீர்,ரத்தம்,கொழுப்பு,தசை,எலும்பு,மஜ்ஜை,விந்து.என்ற ஏழு தாதுக்களாகவே அறியப்படுகிறது.
        மனித உடலில் ஜீவசக்தி நின்று இயங்கும் இடங்களை ஞானிகள், யொகிகள் ஏழாகவே வகுத்தனர்.அவை மூலாதாரம்.சுவாதிஷ்டானம்.மணிப்பூரகம்.அனாகதம்.விசுத்தி.ஆக்ஞை.சகஸ்ரம் என்று எழு சக்கரங்களை கண்டறிந்தனர்.முதுகில் உள்ள தண்டுவடத்தின் விளிம்பில் தொடங்கி மூலையின் உச்சிவரை ஏழு சக்கரங்கள் வழியாக நமது உயிர் சக்தியை ஏற்றி ஏற்றித் தெய்வநிலை பெருவதே சித்தர்கள்.யோகிகள் கண்டறிந்த தெய்வமாகும் வழி.
           உடம்பைத்தவிர வேறுசிந்தனை இல்லாத நிலை மிருக நிலை.நான் வேறு .உம்பு வேறு என்ற சிந்தனையின்றி உடம்பே நான் என்று மதி மயங்கிய நிலை மனித நிலை.உடம்பு நான் அல்ல என்று உடம்பையும் தாண்டி . நான்,என்ற எண்ணத்தை ஏழாவது நிலையிலும் .அதனைத் தாண்டி(துரியம்,துரியாதீதம்)நிருத்தும் நிலை.தெய்வநிலை.இப்போது கூட இந்தியாவில் இந்த நிலை தெய்வங்களாகா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மகான்கள்.
         இந்த ஏழையும் ஏழு பிறவிகளில் கடக்கவே மனிதப் பிறவி ஏழு முறை வாய்க்கிறது என்கிறது வேதாந்த மதம்
      ஒருமையுள்தாம் கற்ற கல்வி எழுமையும்
ஏமாப்புடைத்து.என்று திருவள்ளுவரும் ஒப்புக்கொள்கிறார்.இந்த ஏழு பிறவியிலும் கணவனும் மனைவியும் இனைந்தே முக்திபெற திருமணத்தில் கணவன் மனைவி கைகோர்த்து ஏழு அடிகள் நடக்கும் சப்த பதி என்ற சடங்கு நடத்தப்பட்டுள்ளது.ஆக இந்த ஆன்மீக ஞானம் அடைவது சுலபமா?.,,...கடினமா? வாருங்கள் மூலாதாரத்துக்கு போகலாம்.
        (அன்பு ஆத்மா த.சிவகிரி)
        ஓம் சிவார்ப்பணம்!!!

சனி, 28 மே, 2016

ஓரறிவு முதல் ஆறறிவு வரை (பாகம் இரண்டு)


 
          பஞ்சபூதங்களில் இரண்டாவது நீர்.நமது வாயில் ஊறும் உமிழ்நீர் சுவையறிய துணையாவது ஈறறிவு உயிர்கள் புழுக்கள் நுண்ணுயிர்கள்.,...இவை நீரில் உயிர்ப்பவை.நிலத்தில் உள்ள ஓரறிவுயிரான புல் பூடு போல் இல்லாமல் நெளிந்து  அசைந்து நகரும் இயல்புடையவை.நிலத்திலிருந்து பிரிந்து வாழ்வது .ஆனால் நீரின்றி வாழ முடியாதவை ஈறறிவு உயிர்கள்.
             நிலத்திலும் நீரீலும் வாழும் புழுக்கள் இறகு பெற்று பறக்கும் பொழுது வண்ணத்துப் பூச்சி,தேனி என்று சிறகசைக்கும்போது மூன்றறிவுடைய உயிர்கள் ஆகி மூன்றாம் அறிவாகியா நாசி வழி மணம் நாடி பறக்கிறது.மூன்றறிவுடைய உயிர்கள் மூன்றாம் பூதமாகிய காற்றின் ஆளுகைக்கீழ் வறுகின்றன.காற்றின்றி பறக்க முடியாதல்லவா?
          நான்காவது அறிவாகிய கண்ணோடு தொடர்புடையது நான்காவது பூதமாகிய நெருப்பு.ஒளி வெளிச்சம் என்று ஆது பறவுகிறது.கண்ணே அதனை உணருகிறது.
         ஐந்தாவது பூதமாகிய வானம் ஐந்தாவது அறிவாகிய ஒலியை உள்வாங்கி செவி வழி உணர்த்துகிறது.செவித்துளைக்கு இடையேஉள்ள காலியிடம் ஆகாசம் எனப்படுகிறது.அதுவே ஓங்கார ஒலியை எப்போதும் உள்வாங்கி வைத்திருக்கிறது.இந்த ஐந்தறிவையும் உணர்ந்து உள்வாங்கி,வெளிப்பாய்ச்சும்  ஆறாவது அறிவை உடையவனே படைப்பின் உச்சகட்டமான மனிதன்.
          ஓரறிவு,ஈறறிவு உயிர்களாய் நாம் பரிணாமம் பெற்றதை" நூறுகால் புழுக்களாக ஊர்ந்தோம்'  எட்டுக்கால் பூச்சிகளாக நகர்ந்தோம், நான்குகால் விலங்காக நடந்தோம் இப்போது இரண்டுகால் மனிதராக எழுந்து நின்றோம்"என்று அழகாகச் சொல்கிறார்  'நினைவுக்கலை ஏந்தல் இரா, கனக சுப்புரத்தினம் அவர்கள்.
          ஐம்பொறி,அதன் வழி நுகரும் ஐந்தறிவு, அதனைத்தரும் 'பொருள் முதலாகிய உலகத்தை'   உணரும் விலங்கிற்குப் பொருளே (Matter) முதல்! ஆனால் மனிதனுக்கு கருத்தே முதல்! இதுவே மிக முக்கிய வேறுபாடு. விலங்கு வாழ்வில் உடலே பிரதானம். மனித வாழ்வில் அறிவே பிரதானம்.உடலையும் அறிவையும் கடந்த ஞானநிலையே தெய்வநிலை.இந்த ஆறு அறிவும் மனித உடலில் ஆறு சக்கரங்களாக மலர அவற்றை கடந்த ஏழாவது அறிவே தெய்வநிலை!
          மனத்தால் உயருகிறவன் மனிதன்.அந்த மனத்திலிருந்தும் விலகி உயருகிறவன் தெய்வம். அப்படி மனம் கடந்த மகான்கள் பிறர் மனத்தில் ஓடும் எண்ணங்களை எளிதாக உணர்ந்து சொல்லிவிடுவார்கள்.அதனால் அவர்கள் தெய்வங்களே என்கிறார் திருவள்ளுவர்.
     'ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்'
         மனிதன் இப்படித்தான் தெய்வமாக முடியும்.!
       அடுத்து ஒவ்வொரு பூதங்களாக பார்ப்போம்.அன்பு ஆத்மா .த,சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.

ஓரறிவு முதல் ஆறறிவு வரை

மனிதன் விலங்குகளிடம் இருந்து மாறுபட்ட நிலைதான் ஆறாம் அறிவு.
விலங்கு நிலை.மனித நிலை.தெய்வநிலை என்பதை விங்ஞானமும் மெய்ஞானமும் ஏற்க்கும் நிலையில் கூறவிரும்புகின்றேன்.விலங்கையும் மனிதனையும் பிரித்து விளங்க நினைப்பவர்கள்" மனிதன் ஆறறிவு உடையவன்.விலங்குகள் ஐந்தறிவு அல்லது அதற்கும் கீழான அறிவுடையவை"என்பார்கள்.
மனிதனுக்கு எத்தனை அறிவு? என்று கேட்டால் ஆறறிவு என்று அசத்தலாக பதில் கூறுவார்கள்.அப்படி சொல்பரிடம்"மூன்றாவது அறிவு எது என்று கேட்டால்."கப்சிப்"என்று இரண்டாவது அறிவில் கைவைத்து மூடிக்கொள்வார்கள். அதென்ன முதலாம் அறிவு இரண்டாம் அறிவு என்று குழம்ப வேண்டாம் விளக்குகின்றேன்.

           நமது பொறிகள் ஐந்து?மெய்,வாய்,மூக்கு,கண்,செவி,,,,,,சரிதானே! மெய் என்றால் உடம்பு அது தொடுஉணர்ச்சி உடையது,தூங்கும் போது உடலில் சூடு பட்டாலும் தொட்டாலும் தொடு உணர்ச்சி (Touching sense)நம்மை எழிப்பி விடும்,இது முதல் அறிவு.
              கண் திறக்காத குட்டிகள்,குழந்தைகள் வாயாலும் நாவாலும் தாயிடம் ஓர் ஆனந்தத்தோடு பார்த்திருந்தால்?அது சுவை உணர்வு.(Taste sense) வாயை அடிப்படையாக கொண்டது இரண்டாவது அறிவு.அதுவே இரண்டாவது அறிவு வாய்ச்சுவை என்பதால் கேள்வி கேட்டால் சிலர் வாயை மூடிவிடுவார்கள்.இவர்கள் இரண்டாவது அறிவை மூடியவர்கள் என்றும் கேலி பேசலாம்.

           மூன்றாவது அறிவு குழந்தைகளும் விலங்குக் குட்டிகளும் சரி கண் விழிப்பதற்க்கு முன்பே தாயை அடையாலம் கண்டுகொள்ளும் எப்படி? வாசம்தான் காரணம்,நாய்குட்டிகளும் பூனைகுட்டிகளும் தங்கள் தாயை முகர்ந்து முகர்ந்து தாயின் வாசனையை உணர்ந்துகொல்லும்.தன் தாய் மார்போடும் தோலோடும் சேர்த்து அனைக்கும் போது நிம்மதியாக இருக்கும்.காரணம் தாயின் வாசம்.குந்தைக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் தருகிறது .அதனால்தான் தாயின் புடவையில் ஊஞ்சல் (தொட்டில்) கட்டிதூங்கவைப்பார்கள்.நாசிவழியாக உணரும் மூன்றாவது அறிவு(Smell sense)நுகரும் அறிவு.

             நான்காவது அறிவுதான் கண்.அதன் பார்வைத்திறன்"வளர்ந்த குட்டிகள் கண்களால் பார்த்து அடையாலம் காணுகின்ற ஒன்றை மூலையில் பதிவு செய்கின்றன (Sight sense)காணறிவு நான்காவது அறிவு.

             ஐந்தாவது அறிவு செவி வழி உணரும் ஒலி.தொலைவில் கேட்கும் ஒலியைக்கேட்டு விலங்குகள் காதைத்திருப்பும்.நான்கு அறிவு வாய்த்த பிறகு பரிணாம நிலையில்  ஐந்தாவதாகச் செவி உணர்வு வருகிறது.

           இந்த ஐந்து அறிவு வரை விலங்கிற்கும் மனினுக்கும் பொது ஆறாவது அறிவுதான் மனிதனை விலங்கிடம் இருந்து பிறிக்கும் உயர் அறிவு.அந்த ஆறாம் தான் "மனம்"..,Mind!
               முதல் ஐந்து அறிவும் உடம்பின் தோல்,நாவை உடைய வாய்,மணம் நுகரும் நாசி,பார்வை உடைய கண்,ஒலி கேட்கும் காது என்கிற ஐந்து கருவிகளின் துளை வழியே வெளியிருப்பதை உள்ளே செலுத்தும்,உள்ளிருந்து அதை வாங்கி ஐந்திலும் பொருந்தி நின்று அதனை ஆய்ந்து முடிவுகட்டும் மனம் என்கி்ற ஆறாவது அறிவே மனித நிலை,மனிதன் உயர்திணை விலங்கு.

             அந்த ஆறாவதையும் கடந்து ஏழாவது நிலை எய்தினால் அதுவே தெய்வ நிலை.இந்த ஆறு அறிவைப்பற்றி அறிந்து சொன்னவன் யார்?நோபல் பரிசு பெற்ற மேல்நாட்டுக்காரன் என்று தேடிநாள் தோற்றுப்போவீர்கள்.இதைக்கண்டு சொன்ன பேறறிஞர்.பல்லாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த முழுதமிழன் தொல்காப்பியர் தந்த தொல்காப்பியர் கீழ்கண்டவாறு கூறு வதன் மூலம் கூறுகிறார்.
       ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
        இரண்டறிவு அதுவே அதனோடு நாவே
         மூன்றறிவு அதுவே அவற்றோடு மூக்கே
          நான்கறிவு அதுவே அவற்றோடு கண்ணே
         ஐந்தறிவு அதுவே அவற்றோடு செவியே
         ஆறறிவு அதுவே அவற்றோடு மனமே
         நேரிதின் உணர்ந்தோர் நெறிபடுத்தினாரே!
           ஆக ஆறறிவுடைய மனிதனுக்கு முதல் ஐந்தறிவும் உண்டு.ஐந்தறிவுடைய உயிற்க்கும் முதல் சொன்ன நான்கறிவும் உண்டு.இப்படி உணரவேண்டும்.
          இதைவிட ஆச்சரியம்!இந்த ஐந்தறிவும் .நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம்,ஆகிய ஐம்பூதங்களோடு தொடர்புடையவை எப்படி?
         தாவரங்கள் ஓர் அறிவுடையவை.அவைகள் நிலத்தை இருகப்பற்றி வாழும்.நிலம் போலவே அதன் அசைவும் இருக்கும்.நமது தோலும் ஓரறிவுடைய ஒரு தாவரத்தன்மை உடையதே.
           தோடரும்