புதன், 31 ஆகஸ்ட், 2016

தானங்களின் பலன்கள்.

            தானங்களின் பலன்கள்
              'தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்" என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது, 'நமக்கு மிஞ்சியது போக, மற்றவைகளை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அத்தகைய தானங்கள் பல வகைப்படும். தானம் செய்வதால் பலனும் கிடைக்கும்.
என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
           தானங்களின் பலன்கள் :
         🌀 அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும், சொர்க்கம் கிட்டும்.
         🌀 வஸ்திர தானம் - ஆயுளை விருத்தி செய்யும்.
         🌀 பூமி தானம் - பிரமலோகத்தையும்,
         🌀 கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பித்ரு கடன் ஆகியவற்றை அகற்றும்.
          🌀 தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.
          🌀 கோ தானம் (பசு தானம்) - ரிஷிகடன், தேவகடன், பித்ரு கடன் போன்றவை தீரும்.
          🌀 நெய், எண்ணெய் தானம் - நோய் தீர்க்கும்.
          🌀 தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.
          🌀 வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.
          🌀 தேன் தானம் - தேனை ஒரு வெண்கலப் பாத்திரத்தில் வைத்து தானம் அளித்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
          🌀 நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.
          🌀 அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.
          🌀 பால் தானம் - துக்கம் நீங்கும்.
          🌀 தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.
          🌀 பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.
           அன்பு ஆத்மா தசிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.

கிழமைகளின் விரதங்கள் பலன்.

           கிழமைகளுக்கான விரதங்களும் பலன்களும் !
           இறைவனை விரதமிருந்து வழிபடுவது சிறப்பை தரும். எந்த கிழமைகளில் விரதமிருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து வழிபடுவது இன்னும் சிறப்பு. விரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று சிலர் நினைப்பது உண்டு. நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம் ஆகும்.  ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும். விரதத்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள். அது மனதை உறுதியாக வைக்க உதவுகிறது.
                எந்த கிழமைகளில் விரதமிருந்தால் எந்த பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
             விரத பலன்கள் :
       🔔 ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் அகலும்.
        🔔 திங்கள்கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம்.
        🔔 செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.
        🔔 புதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
        🔔 வியாழக்கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
        🔔 வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
         🔔 சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
           அன்பு ஆத்மா தசிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.

புதன், 24 ஆகஸ்ட், 2016

உபவாசம் அறிவோமா!!

            எத்தனை உபவாச விரதங்கள் உள்ளது தெரியுமா?
            உபவாசங்கள் என்பது எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி இருக்கும் விரத முறையாகும். இது நமது உடலுக்கு நன்மையும், மனதை கட்டுப்படுத்த சிறந்த வழி முறை ஆகும். இந்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள உபவாச விரதங்கள் பற்றி பார்ப்போம்.
            🔔 உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
            🔔 தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 பசுவின்பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
             🔔 இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
              🔔 மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
              🔔 மூன்று நாட்கள் தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
               🔔 மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
                🔔 மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
               🔔 இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
              🔔 ஒரு நாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
              🔔 ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
              🔔 ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
             🔔 தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
              🔔 ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும், நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
              🔔 ஒரு நாள் முழுவதும் அரச இலை தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிர்களையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறு நாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
              அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.

விளக்கேற்றும் வேளை.

             விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்பது ஏன்?
             🌅 தினமும் விளக்கேற்றி அம்மனை வழிபடுவது சிறப்பு. மாலை நேரத்தில் விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது ஏன் தெரியுமா?
              🌅 மாலை நேரம் வழிபாட்டுக்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல.
               🌅 எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்குள் பெண்கள் தலைவாரி, பூமுடித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது சிறப்பை தரும்.
                🌅 திருமகள் வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் தினமும் மாலையில் வீட்டின் பூஜை அறையிலும், வாசலிலும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
               🌅 தீபம் ஏற்றும் போது கொல்லைபுற கதவை மூடிவிட வேண்டும். அல்லது பின்புற கதவு இருந்தால் அதை மூடி விட வேண்டும்.
                🌅 தீபங்களில் சிறந்த தீபம் நெய் தீபம். நெய் தீபத்தை வீட்டில் வைத்து வழிபட சிறந்த வளமும் நலமும் பெறலாம்.
           அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.

உருத்ராட்சம் உண்மையானதை அறிவது எப்படி.

         உருத்ராட்சத்தில் போலியான மணிகளை கண்டறிவது எப்படி?
            🌀 உருத்ராட்சம் ஒருவகை மரங்களிலிருந்து பெறப்படும் மணிகளாகும். வடமொழியில் உருத்ராட்சம் என்பதற்கு 'உருத்ரனின் கண்கள்" என்பதாக பொருள் கூறப்படுகிறது. உருத்ரன் என்பது சிவனை குறிக்கிறது.
             🌀 உருத்ராட்சத்தில் பல முகங்கள் கொண்ட உருத்ராட்சங்கள் உண்டு. ஒரு முகம் முதல் பதினாறு முகம் கொண்ட உருத்ராட்சங்கள் வரை உண்டு. இவைகளில் போலியான மணிகள் வருவதுண்டு.
            🌀 இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. உருத்ராட்சம் தனக்கென சில தனித் தன்மைகளைக் கொண்டது.
             🌀 தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. உருத்ராட்சத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.
                🌀 உருத்ராட்ச மணியின் துளைகளுக்கு அருகே செப்புநாணயங்களை வைத்தால் உருத்ராட்சம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும்.
        அன்பு ஆத்மா .சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்

சனி, 20 ஆகஸ்ட், 2016

சங்கடஅர சதுர்த்தி!!!

          சங்கடஹர சதுர்த்தி !
            விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
           🌠 ஒவ்வொரு மாதமும் வரும் 'சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
               🌠 இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.
           🌠 அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது, பாண்டவர்கள், துரியோதனாதியரை வென்றது போன்றவை நிகழ்ந்ததும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையால் தான்.
             விரதம் இருக்கும் முறை :
              🌞 சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
              🌞 மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.
              🌞 அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
             🌞 விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
          விரதத்தின் பலன்கள் :
           🌟 இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
            🌟 மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
             🌟 சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
             அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

புதன், 17 ஆகஸ்ட், 2016

காயத்திரி மந்திரம்.


             காயத்ரி மந்திரம்,            மந்திரங்களில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது விசுவாமித்திரர் என்ற முனிவரால் இயற்றியதாகக் கூறப்படுகிறது. காயத்ரி மந்திரமானது அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும் மந்திரமாகும்.
                மந்திரம் :
          ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத் .
          காயத்ரி மந்திரத்தின் நிதியும் பலன்களும் :
          ❊ காயத்ரி மந்திரத்தைப் பொருள் புரிந்து குருமுகமாக உபதேசம் பெற்று மந்திரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை மந்திரம் செய்யும்போது காயத்ரி தேவியையும், சூரிய பகவானையும், ஸ்ரீமந் நாராயணனையும் தியானித்து பக்தி சிரத்தையோடு மந்திரம் செய்யவேண்டும். இதனால் மனோபலமும் வசீகர சக்தியும் கூடும்.
           ❊ காயத்ரி மந்திரத்துக்கு ஆத்ம சித்தி, சரீர சித்தி மிக அவசியம். மந்திரம் செய்வதற்கான இடம், சுத்தமும் காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள இடமாகத் திகழ்தல் வேண்டும்.
          ❊ நதிக்கரைகள், திருக்குளங்கள், அமைதியான மலைப்பிரதேசங்கள், மகான்களின் அதிஷ்டானம், திவ்யதேசங்கள் போன்ற இடங்களில் அமர்ந்து தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.
          ❊ பசு மடத்தில் அமர்ந்து இம்மந்திரத்தை தியானித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும். அதுபோன்று கோவில் கும்பாபிஷேக காலத்தில் யாக சாலையில் அமர்ந்து மந்திரம் செய்தால் பலகோடி நன்மைகள் பெறலாம்.
         ❊ சூரியோதயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் காலம்வரை எப்போதும் இம்மந்திரத்தை உச்சரிக்கலாம். வைகறையிலும், அந்தி வேளையிலும் செய்வது உத்தமம்.

           ❊ காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியவாறும் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். எரிகின்ற தீபத்தைப் பார்த்தோ, அம்பாள் படத்தைப் பார்த்தவாறோ கும்பிட்டால் கூடுதல் பலனைப் பெறலாம். மந்திரம் செய்யும்போது இடையில் எழுந்து செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், மீண்டும் கை, கால்களைச் சுத்தம் செய்துவிட்டு ஜெபத்தைத் தொடர்ந்து செய்யலாம். காயத்ரி ஜெபத்தின் மூலம் ஞானமும் அமைதியும் வாழ்வில் பெறலாம்.

   ஸ்தானங்களின் குறிப்புகள் :

         ஒன்றாம் இடம் என்பது செயல், கௌரவம், திறமை, புகழ், கீர்த்தி இவற்றைக் குறிக்கும். இரண்டாம் இடம் என்பது வாக்கு, வித்தை, தனம், குடும்பம், ஆகியவற்றைக் குறிக்கும்.

சனி, 6 ஆகஸ்ட், 2016

சித்திரகுப்தன் வரலாறு.பார்போம்.

           சித்ரகுப்தன் வரலாறு.  

               தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த சிவபெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் இவர் சித்திரகுப்தன் என பெயர; பெற்றார்.
            ✫ சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் இவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது. தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். அகலிகையின் சாபத்தால் அவனுக்கு நேர்ந்த துயரம் அது. இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள்

           ✫ பத்தினி கொடுத்த சாபத்தை மாற்ற தன்னால் முடியாதே, இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவபெருமான், இந்திரனுக்கு இவரை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் இவரை புகச் செய்த சிவபெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் ஏக்கத்தைத் தீர்த்துவைக்குமாறு கூறினார்.
           ✫ இந்திரனுக்கோ பெருமை தாங்கவில்லை. இவ்வளவு புத்திசாலியாகவும் தீர்க்கதரிசியாகவும் இருக்கும் தன் மகனை, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எமனிடம் அனுப்பிவைக்க முடிவெடுத்தான். அதாவது, எல்லா மக்களுடைய வாழ்வின் முடிவிலும் பாவ, புண்ணியத்தை தீர்மானிக்கும் கணக்கைச் செய்ய! பிறவிக்கடன் தீர்த்து எப்போது கயிலாயம் செல்வோம் எனக் காத்திருந்த இவர், இதைக் கேட்டுக் கலங்கினார். என்னால் அங்கு போக முடியாது என்று சொல்லி கயிலாயம் சென்றுவிட்டார். இதனால் இந்திரன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான். மகனை மறக்கமுடியாமல் கயிலாயம் போய், சிவபெருமானிடம் முறையிட்டார். மகனை தனக்குத் திருப்பித் தருமாறு கேட்டார்.
           ✫ சிவபெருமானும் அவரது வேதனையை உணர்ந்து, இனிமேல் சித்திரகுப்தன் உன்னுடனே, உன் தளபதி எமனின் உதவியாளனாக இருக்கட்டும் என்று சொல்லி அனுப்பிவைத்தார். அதோடு மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி வைத்து, அவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் அல்லது தண்டனைகள் கொடுக்கலாம் என எமனுக்கு யோசனை சொல்லும் கவுரவத்தையும் கொடுத்தார்.
          அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

அழகன் முருகன்.காணலாம்

          அழகன் முருகனின் பதினாறு திருக்கோலங்கள்.
             அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்று பெயர். அனைவரின் மனதிலும் கூடி கொள்ளும் முருகனை ராஜ வடிவில் காண, கண் கோடி வேண்டும். குறிஞ்சி நிலக்கடவுளான முருகன் பதினாறு திருக்கோலங்களில் அருளாட்சி புரிகின்றார்.
         🌟 சக்திதரன் : ஒரு முகம், இரு கரங்கள், சக்திப்படையுடன் காட்சியளிப்பவர்.
         🌟 ஸ்கந்தன் : இடையில் கௌபீணம் மட்டும் தரித்து தண்டம் பற்றிய பழனி ஆண்டியின் திருக்கோலம்.
         🌟 கஜவாகனன் : யானை மீதமர்ந்து நான்கு கரங்களுடன் கொண்ட கோலம்.
         🌟 சரவணபவனன் : பன்னிரு கரங்கள், ஒரு முகம், ஆறு குழந்தையாகத் தோன்றி அம்பிகையால் ஒரு முகமாக மாற்றப்பட்ட திருக்கோலம்.
         🌟 தேவசேனாபதி : ஆறுமுகம் - பன்னிருகரங்கள் கொண்டு இந்திரனின் மகளான தெய்வானையை மணந்த கோலம்.
          🌟 சுப்பிரமணியன் : ஒரு முகம், நான்கு கரங்கள், ஆயுதம் பற்றிய கீழ்க்கரங்களால் அபயம், வரம் அளித்து அருளும் கோலம் கொண்டவன்.
          🌟 கார்த்திகேயன் : ஆறுமுகங்களும் ஆறு கரங்களும் உடையவன். அபய-வரமளிக்கும் கரங்கள். பிற கரங்களில் ஆயுதங்கள் கொண்ட கோலம்.
        🌟 குமரன் : நான்கு கரங்களுடன் தேவியான தெய்வானை வலப்புறத்தில் அமைய நின்ற திருக்கோலத்தில் அருள்பவன்.
        🌟 ஷண்முகன் : ஆறுமுகங்களோடு பன்னிரு கரங்கள் ஆயுதங்கள் ஏந்திய நிலை. மயில் மீது முருகன் அமர;ந்திருக்க அருகில் தேவியர் நின்ற கோலம்.
          🌟 தாரகாரி : சூரபத்மனின் தம்பியான தாரகாசுரனை அழிக்கப் பூண்ட கோலம். ஆறுமுகம் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்திய போர்த் திருக்கோலம்.
          🌟 வள்ளிமணாளன் : தமிழரின் பண்பாடான களவு ஒழுக்கத்தின் மூலம் காதல்கொண்டு திருமணம் புரிந்த கோலம்.
           🌟 பாலமுருகன் : சிறிய பாலக வடிவம், ஒரு கரத்தில் தாமரை மலர்கள், மற்றொரு கரத்தை இடைமீது இருத்திய அழகிய தோற்றம்.
           🌟 சேனாளி : ஆறுமுகம் பன்னிரு கரங்கள், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை, ஏனைய கரங்களில் ஆயுதங்கள்.
          🌟 கிரௌஞ்சபேதன் : தாரகன், சூரனின் தம்பி இவன் கிரௌஞ்சமலை என்ற மலையின் வடிவில் தனது அண்ணனின் கோட்டையைக் காத்து நின்றான். சக்திவேலின் மூலம் அவனை அழித்து நின்ற திருக்கோலம். ஆறுமுகம், ஆயுதம் தாங்கிய பன்னிருத் திருக்கோலங்கள்.
           🌟 சிகிவாகனன் : சூரனின் சம்சஹாரத்திற்குப் பின் மயிலான அசுரனின் மீது அமர்ந்த கோலம்.

            🌟 பிரம்ம சாஸ்தா - பிரணவத்தின் பொருளறியா பிரம்மனை சிறையிலடைத்து, தானே அவரது படைப்புத் தொழிலை ஏற்றதால், பிரம்மனது பொருட்களான அட்சமாலை மற்றும் கெண்டியை ஏந்திய திருக்கோலம்.
           (ஹோம மந்திரம் - ஹோமத்தின் பலன் :
ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ : சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாகும்.)
        அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.

ஆடி மாதத்தின் சிறப்புகள்.

          ஆடி மாதத்தின் சிறப்புகள் .
               தமிழ் மாதங்களில் எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்துக்கு உண்டு. ஆடி மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாள். அதோடு ஆடி மாதம் மழைக் காலத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. அதனால்தான் ஆடி மாதம் முழுவதும் மகத்துவம் நிறைந்த மாதமாக உள்ளது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பானதாகும். இந்த நாட்களில் பெண்கள் உரிய முறைப்படி பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தால் அம்மனின் முழுமையான அருளைப் பெற முடியும். குடும்பத்துக்கு அச்சாணியாகத் திகழும் பெண்கள் ஆடி மாத வழிபாடுகளில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களது குடும்பம் மேம்படும் என்பது ஐதீகமாகும். ஆடிப் பிறப்பு  
            ✶ மாதத்தின் முதல் நாளான ஆடிப் பிறப்பன்று, புது மாப்பிள்ளையைப் பெண்ணுடன் அழைக்கும் பெண் வீட்டார். அறுசுவை உணவளித்து கௌரவிப்பர். பின்னர; மாப்பிள்ளையை மட்டும் திருப்பி அனுப்பிவிடுவர். அம்மாதம் முழுவதும் மணமான புதுப்பெண், தன் தாய் வீட்டிலேயே தங்கிவிடுவாள். ஆடி மாதம் பெண்கள் மாதம் என்பதால் பெண் தெய்வங்களைக் கொண்டாடி மகிழ்வர்.
                  (ஆடித் தபசு  )
          ✶ ஆடித் தபசு என்பது ஆதிசக்தி கோமதியம்மனாக தவமிருந்த நிகழ்வினைக் குறிக்கும் திருவிழாவாகும். இந்த திருவிழா ஆடி மாதம் சங்கரநாராயணன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. சிவனும், விஷ்ணுவும் ஒன்றாயிருந்த காட்சியைப் பார்வதி தேவி காண விரும்பினார். அவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆடி மாதம் பௌர்ணமி அன்று இடது பாகம் சிவனாகவும், வலது பாகம் நாராயணனாகவும் காட்சி அளித்தார் சிவபெருமான்.
           (ஆடிப் பெருக்கு)  
           ✶ நுரை பொங்க இரு கரைகளையும் தொட்டுப் பொங்கிப் பெருகி ஓடும் காவேரியை மக்கள், 'வாழி காவேரி" என்று வாழ்த்தி பூக்களால் அர்ச்சித்து வணங்குவார். குடும்பத்துடன் நீராடி மகிழ்வார்கள். ஆண்டாளின்
                  (ஆடிப் பூரம)்
         ✶ ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப் பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். பொதுவாகப் பெருமாள் கோவில்களில் ஆண்டாளுக்குத் தனிச் சன்னிதி இருக்கும். இந்த நாளில் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவாள்.
            அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.