திங்கள், 1 ஆகஸ்ட், 2016

ஆடி மாதத்தின் சிறப்புகள்!!!

         ஆடி பௌர்ணமி சிறப்புகள்.  

           ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. 'ஆடி செவ்வாய் தேடிக் குளி" என்பது பழமொழி உண்டு.
          🌕 கச்யபர், அத்ரி, பரத்வாஜ விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகளாவர். இந்த எழுவரும் சிவனிடமிருந்து சில யோகபயிற்சிகளை கற்றனர்,

              🌜 அந்த பயிற்சிகளை அவர்கள் தொடர்ந்து 84 ஆண்டுகள் செய்து வந்தனர். இருப்பினும் சிவபெருமான் அவர்களை பார்க்கவும் இல்லை அவர்களிடம் பேசவும் இல்லை. என்னினும் ரிஷிகள் தங்கள் பயிற்சிகளை தொடர்ந்தனர், அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவபெருமான் மனமிறங்கி அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்க ஆயுத்தமானார்.
           🌕 தக்ஷினாயன்ய காலம் என்பது சூரியன் தெற்கு நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கும் காலம். எதையும் உள்வாங்கிக்கிக்கொள்ள சிறந்த காலம். அதற்கு ஏற்றார் போல் சிவபெருமான் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று தெற்கு நோக்கி அமர்ந்து சப்த ரிஷிகளுக்கு ஒரு குருவாக போதனைகளை வழங்கிய காலம்.

            🌜 சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி 'குரு பௌர்ணமி" என்றும், தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் 'தட்சிணாமூர்த்தி" என்றும் அழைக்கப்படலானார். வியாச பௌர்ணமி:
             🌕 வேதங்களை சாமானியர்களால் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. வேதங்களின் உட்பொருளை அனைவரும் தெரிந்து கொள்ள அதன் அர்த்தங்களை விளக்கமாக எடுத்துச் சொல்பவரை 'வியாசர்" என்று கூறுவார். அதனால் வடநாட்டில் ஆடி மாதப் பௌர்ணமியை குரு பூர்ணிமா என்றும், வியாச பௌர்ணமி என்றும் கொண்டாடப்படுவது வழக்கம்.
             🌜 ஆடி மாதப் பௌர்ணமியை 'ஆஷாட சுத்த பௌர்ணமி" என்று கூறுவதும் உண்டு. இந்நாளில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொண்டு, வியாச பூஜை செய்வார்கள் என்றும் கூறுவர்.
          🌕 இந்நாளில் மாந்தர்கள் அனைவரும் மனதளவில் தங்களுடைய ஆஸ்தான அபிமான குருவாக ஏற்றுக்கொண்டவருக்கு பூஜைகள் செய்தால் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட வித்தைகளை முழுமையாக உள்வாங்கும் ப்ராப்ததை பெறுவது உறுதி.
        அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக