வியாழன், 15 டிசம்பர், 2016

ஓம் என்றால் என்ன.

            ஓம் என்பதன் விளக்கம் .
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
       👉 ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இறைவனின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்தியமான, தூய்மையான, மாறுதலற்ற, எல்லையற்ற அறிவையும், அளவற்ற பேராற்றலையும் தன்னுள் ஆழ்ந்து, அகன்று பொதிந்து
வைத்துள்ள ஒரு பெயராகும்.
            👉 ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்மூர்த்திகளை படைத்த பராசக்தி ஓம் காரத்தில் இருந்து தோன்றினால் என்று வரலாறு கூறுகிறது. மேலும் பிரம்மா ஒம் காரத்தை வைத்து தான் உலக ஜீவன்களை படைக்கிறார் ஓம் என்பதற்க்கு பிரணவம் என்று பொருள், பிரணவம் என்றால் முடிவில்லாதது என்று கூறுவார்கள்.
          👉 இந்த ஓம் என்பதை வைத்து தான் மந்திரம் தொடங்கப்படுகிறது ஏனென்றால் இதுதான் பிரபஞ்சத்தின் சாவி இதை உச்சரித்து கூறும்போது அந்த சொல் வலிமை அடைகிறது.
          👉 ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது. வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹhபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க ஓம் என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது. ஓம்-ன் பொருள் :
         👉 ஓம் என்பதை பிரித்தால் அ காரம் உ காரம் ம காரம்
         👉 அ காரம் என்பது சிவம் : வலதுகண் சூரியன்
         👉 உ காரம் என்பது சக்தி (பார்வதி) : இடதுகண் சந்திரன்
         👉 ம் காரம் என்பது இரண்டும் சேர்ந்தது : புருவமத்தி சுழுமுனை மற்றொரு பொருள் : அ, உ, ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ஓம் என்ற பிரணவ ஒலி பிறக்கிறது. இதில் அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து.
         மேலும் அ என்பது இறைவனையும், உ என்பது உலக உயிர்களையும், ம் என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும். இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த அ, உ என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்த பிரபஞ்சத்தை உணர்த்த ம் என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது. மேலும் ஓம் என்பது எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பதாகும்.
   அன்பு ஆத்மா த.சிவகிரி. ஓம் சிவார்ப்பனம்.

திங்கள், 28 நவம்பர், 2016

மனுமுறைக் கண்ட வாசகம்

       திரு அருட் பிரகாச வள்ளளார் நமது  பிறப்புக்கு காரனமாவதை பட்டியலிடுகிறார்.
       நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனே!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனே!
       தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனே!
கலந்த சினேகரைக் கலகம் செய்தேனே!
       மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனே!
குடிவரி யுயர்த்தி கொள்ளை கொண்டேனே!
       ஏழைகள் வயிறு எரியச் செய்தேனே!
தருமம் பாராது தண்டம் செய்தேனே!
       மண்ணேரம் பேசி வாழ்வழித்தேனே!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனே!
       களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனே!
பொருளை இச்சித்து பொய் சொன்னேனே!
        ஆசைகாட்டி மோசம் செய்தேனே!
வரவுபோக்கொழிய வழியடைத்தேனே!
       வேலையிட்டி கூலி குறைத்தேனே!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனே!
        இரப்போர்க்கு பிச்சை இல்லையென்றேனே!
கோள் சொல்லி குடும்பங் கலைத்தேனே!
       நட்டாற்றில் கையை நழுவ விட்டேனே!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனே!
        கற்பழித்தவரைக் கலந்திருந்தேனே!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனே!
       கணவன் வழிநிற்போறைக் கற்பழித்தேனே!
கருப்பமழித்து களித்திருந்தேனே!
        குருவை வணங்கக் கூசிநின்றேனே!
குருவின் கானிக்கை கொடுக்க மறந்தேனே!
       கற்றவர் தம்மை கடுகடுத்தேனே!
பெரியோர்பாட்டிற் பிழை சொன்னேனே!
       பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனே!
கன்றுக்கு பாலூட்டாது கட்டி வைத்தேனே!
        ஊன்களை உண்டு உடலை வளர்த்தேனே!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனே!
        அன்புடையவர்க்கு துன்பஞ்செய்தேனே!
        இவ்வாறு வள்ளார் சுவாமிகள் தன்பிறப்புக்கும் வாழ்கைக்கும் இதெல்லாம் காரணமானதோ என்றோ என்று மனம் உருகுகின்றார் இறைவனிடம்.
         மேலே உள்ள கலக்கத்தில் சிக்காத மனிதன் உண்டு என்றால் அதுவும் வள்ளளாரே பிறகு ஏன் இந்த பாடல்.இந்த பாவங்கள் நம்பிறப்புக்கு காரணம் ஆகும் ஆகவே அதை நீக்க வேண்டும் என்கிறார்.வள்ளளாரின் பாதம் போற்றி நாமும் நாமும் வாழ்வோம்.அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை!அருட்பெரும் ஜோதி.
     அன்புன் ஆத்மா த.சிவகிரி  . ஓம் சிவார்ப்பனம்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

பஞ்சமி திதி நாள்- ஸ்ரீ வராஹி வழிபாடு

              🌟 வாழ்வளிக்கும் ஸ்ரீவாராஹி தேவி, சப்த மாதர்களில் ஒருத்தி. சப்த மாதர்களின் மகிமையை தேவி மஹாத்மியம் முதலான ஞான நூல்கள் விரிவாக விளக்குகின்றன.
           மார்க்கண்டேய புராணத்தில் அமைந்திருக்கிறது தேவிமஹாத்மியம். 700 மந்திரங்களைக் கொண்டதால் 'சப்த ஸதீ" என்று போற்றப்படுகிறது.
             🌟 இந்த நு}ல், அசுரர்களாகிய சும்ப - நிசும்பர்களை அழிக்க ஆதி சக்திக்கு உதவியாக அவதரித்தவர்கள் சப்தமாதர்கள் என்று விவரிக்கிறது. இவர்களில் வாராஹி தேவியை வழிபட, சத்ரு பயம் நீங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். விவசாயம் செழிக்கவும் இவளை வழிபடுவார்கள்.
        வழிபட உகந்த நாட்கள் :
           பஞ்சமி திதி நாட்கள். அர்ச்சனைப் பொருட்கள் : குங்குமம், செந்நிறப் பூக்கள்.
    புண்ணிய நூல் : வாராஹிமாலை
                      நிவேதனம் :
        🌟 தோல் நீக்காத பூண்டு கலந்த உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன். சிறப்பு வழிபாடு :
             🌟 பஞ்சமி திதி நாட்கள் ஸ்ரீவாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில், நிவேதனமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பதார்த்தங்களை நிவேதனம் செய்து, வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம்.
        🌟 மேலும் அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றி கூறி, தியானித்து வழிபட்டால், சகல வரங்களையும் அருள்வாள். வழிபாட்டு மந்திரங்கள், வாராஹி மாலையில் ஒரு பாடல்...
          இருகுழை கோமளம் தாள்புட்ப ராகம்
       இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை
       கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக்கனிவாய் பவளம்
       சிறந்த வல்லி மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!
      🌟 பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் இந்தப் பாடலையும் பாடி மனமுருகி வாராஹிதேவியை வழிபட, நமக்கு துணை நிற்பாள். அஸ்வினி, பரணி, மூலம் மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்கள் வாராஹியை வழிபட்டு அருள் பெறலாம்.
      அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

வியாழன், 17 நவம்பர், 2016

முருகபெருமானின் ஆறு முகம் அறிந்து கொல்வோம்.

முருகனின் ஆறு முகங்கள் என்ன தெரியுமா?
        🌟 “வேலனை வணங்குவதே நமது முதல் வேலை” என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவன் குமரன். தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். இதனை “முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்” என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.
         🌟 இப்படி பல சிறப்புகளைக் கொண்ட முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளது. அந்த ஆறுமுகங்கள் என்ன என்று இங்கு பார்ப்போம்.
         🌀 ஒரு முகம், பூங்கொடி போன்ற இடையைக் கொண்டு குறத்தி வள்ளியுடன் புன்னகையோடு நமக்குக் காட்சி தரும் முகம்.
        🌀 குற்றம் இல்லாமல் திகழ்வதற்காகப் பல கதிர்களை விரித்து வெளிச்சம் தரும் முகம் தான் இரண்டாவது முகம்.
       🌀 முருகனைச் சுற்றி நின்ற படி அவரை புகழ்ந்து பாடுபவர்களைப் பார்த்து இனிமையாகச் சிரித்துக் கொண்டே பக்தர்களுக்கு அருள் தரும் முகம் தான் இந்த மூன்றாவது முகம்.
       🌀 அந்தணர்கள் சிரத்தையாக அமர்ந்து வேதங்களை முழங்கி பல யாகங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஏற்றுக்கொள்கிறது முருகனின் நான்காவது முகம்.
       🌀 முருகனின் முகத்தை நாம் சூரியனாகவோ அல்லது சந்திரனகவோ காணப்படும் முகம் தான் ஐந்தாவது முகம்.
      🌀 உலகத்தில் எல்லாம் நல்லதாக நடந்துகொண்டிருக்கும் போது, நடுவே சில தீய சக்திகளும் திகழும். அப்போது தீய சக்திகளோடு போர் செய்து வெல்லும், அது மட்டுமல்லாமல் நமக்கு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டும் முகம் தான் ஆறாவது முகம்.
           அன்புன் ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

புதன், 21 செப்டம்பர், 2016

நட்சத்திமும் மந்திரமும்.

                                                                  நட்சத்திரமும் மந்திரமும்.
                       மந்திரம் என்பது ஒரு நம்பிக்கையாகும். நேற்று அஸ்வினி நட்சத்திரம் முதல் சுவாதி நட்சத்திரம் வரையிலான                                                    மந்திரத்தை பார்த்தோம்.
                         இன்று மீதமுள்ள விசாகம் நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரையிலான மந்திரத்தை பார்ப்போம்.
                   விசாகம் :
           பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
                    அனுஷம் :
             மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
                   கேட்டை :
             தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

                    மூலம் :
              திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
                  பூராடம் :
              அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
                  உத்திராடம் :
               கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய

                   திருவோணம் :
              இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
                  அவிட்டம் :
               அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
                    சதயம் :
              ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
                  பூரட்டாதி :
             புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
                  உத்திரட்டாதி :
             அந்த காந்த காய பாப ஹhரிணே நம: சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
                     ரேவதி :
                 சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய.  
                  இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து இறைவனை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
                   நட்சத்திரமும் அணிய வேண்டிய ருத்ராட்சத்திர முகங்களும் : அஸ்தம் - இரண்டு முகம். சித்திரை - மூன்று முகம். சுவாதி - எட்டு முகம்.
               அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

சாஸ்திரம் கூறும் உண்மை.

            சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்.
               சாஸ்திரங்கள் பல வகையான கருத்துகளை நமக்கு எடுத்து கூறுகின்றன. அதை ஆராய்ந்து நல்லது கெட்டது என பிரித்து நம் நடந்து கொள்ளுதல் நன்மையை தரும். இப்போது சாஸ்திரங்கள் கூறும் சில முக்கிய எச்சரிக்கையை நம் தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வோம்.
          🌟 குளிக்கும்போது நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும்.
          🌟 தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது.
          🌟 நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது.
          🌟 கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது.
          🌟 சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது.
          🌟 எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது.
          🌟 இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும்.
         🌟 வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம் துப்பக்கூடாது.
         🌟 அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது.
        🌟 தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப்பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது.
        🌟 ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடயிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது.
        🌟 கடும்வெயில், மயானப்புகை, தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்.
         🌟 இரு கைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
         🌟 இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

            நட்சத்திரங்களும் வழிபட வேண்டிய திருத்தலங்களும் :
            பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதிசேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்.
            உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தட்ஷிணாமூர்த்தி - திருவையாறு.
          ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்.
              அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் திருத்தம் திருநல்லாறு!


                திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோவில் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களில் ஒன்றாகும். இது தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரது பாடல் பெற்ற இத்தலம் காரைக்காலில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது நம்பிக்கை ஆகும். இங்குள்ள சனிபகவான் சன்னிதி பிரசித்தி பெற்றதாகும். சப்த விடங்கத் திருத்தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது.
            கோவில் வரலாறு :
               தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனை துன்புருத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார். அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.
              எனவே நளனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் சனீஸ்வரன் என்ற பெயர் தாங்கி அருள்பாலிக்கின்றார்.
          கோவில் அமைப்பு :
          நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த ராஜகோபுரமும் அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக உள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது.
              சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது. சனி பகவான் சன்னிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார்                             
          அதையடுத்து அம்பாள் சன்னிதி உள்ளது. உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரம்மனும், துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சன்னிதி தலவிநாயகர் சன்னிதியாகும்.
            சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சன்னிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சன்னிதிகளும் உள்ளன. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம்.
            தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் நடைபெறும். மேலும், வைகாசியில் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
            பரிகாரங்கள் :
               சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வானி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்து கொள்ளலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
          களத்திர தோஷம் நீங்க..! சுமங்கலி பெண்களுக்கு துணி வகைகள், தேங்காய், பூ, பழம், தாலிக் கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெற்றால் களத்திர தோஷம் நீங்கும்.
                அன்பு ஆத்மா .சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

சிவராத்திரி அறிவோம்!!


             சிவராத்திரி என்பதற்கு 'சிவனுக்கு உகந்த இரவு" என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்திசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
              புராணக் கதை :
            பிராமவுக்கும் விஷ்ணுவுக்கும் போர் உண்டான போது இருவருக்கும் ஓர் போட்டி வைத்தார் ஈசன். யார் முதலில் தன் திருமுடியையும் பாதத்தையும் பார்க்கிறார்களோ அவர்களே உயர்ந்தவர் என்று ஈசன் கூறினார். அதில் திருவடியை பிரம்மன் பார்த்ததாக போய் சொன்னாதல் ஈசன் கோபமுற்று அண்ணாமலையில் ஜோதி பிழம்பாய் அமர்ந்தார். இவ்வாறு ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்மா, விஷ்ணுக்களின் ஆணவம் அகற்றி மன்னுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவுதான் மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
                 ஐந்து சிவராத்திரி :
          🔔 மகா சிவராத்திரி :  மாசி மாதத் தேய்பிறை சதுர்த்திசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு 'வருஷ சிவராத்திரி" என்ற பெயரும் உண்டு.
           🔔 யோக சிவராத்திரி :  திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல் - இரவு சேர்ந்த அறுபது நாழிகை (24 மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.
            🔔 நித்திய சிவராத்திரி :   வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை - வளர்பிறைகளின் சதுர்த்திசி திதி இடம்பெறும் இருபத்துநான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி.
            🔔 பட்ச சிவராத்திரி :  தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினாலாம் நாளான சதுர்த்திசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
            🔔 மாத சிவராத்திரி :   பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்திசியை அனுசரித்து வரும். ஆனால் இந்த மாத சிவராத்திரி, மாதத்தின் மற்ற திதிகளிலும் வரும்.
         அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்

விநாயகர் சதுர்த்தி விரதம்!!


            விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விநாயகர் சதுர்த்தி விரதம். விக்ன விநாயரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் பெறலாம். விரதத்தால் பலன் பெற்றோர் :
          🌞 பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈஸ்வரனைக் கணவராக அடைந்தார். தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
          🌞 ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர். சூரசேனன் என்னும் மன்னன் இந்த விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
           விரதமிருக்கும் முறை :
             🌟 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
              🌟 சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்த வித தடைகளும் இல்லாமல் அருள் புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
            🌟 நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.
           🌟 காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
          🌟 இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடை பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.
           🌟 பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் செய்யலாம்.
           🌟 விநாயகரை வேண்டி விருதமிருந்தால் பிள்ளை விநாயகர் வேண்டுதலை நடத்திக் கொடுப்பார்.
          அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.