செவ்வாய், 13 செப்டம்பர், 2016

சாஸ்திரம் கூறும் உண்மை.

            சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்.
               சாஸ்திரங்கள் பல வகையான கருத்துகளை நமக்கு எடுத்து கூறுகின்றன. அதை ஆராய்ந்து நல்லது கெட்டது என பிரித்து நம் நடந்து கொள்ளுதல் நன்மையை தரும். இப்போது சாஸ்திரங்கள் கூறும் சில முக்கிய எச்சரிக்கையை நம் தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வோம்.
          🌟 குளிக்கும்போது நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும்.
          🌟 தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது.
          🌟 நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது.
          🌟 கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது.
          🌟 சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது.
          🌟 எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது.
          🌟 இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும்.
         🌟 வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம் துப்பக்கூடாது.
         🌟 அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது.
        🌟 தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப்பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது.
        🌟 ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடயிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது.
        🌟 கடும்வெயில், மயானப்புகை, தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்.
         🌟 இரு கைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
         🌟 இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

            நட்சத்திரங்களும் வழிபட வேண்டிய திருத்தலங்களும் :
            பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதிசேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்.
            உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தட்ஷிணாமூர்த்தி - திருவையாறு.
          ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்.
              அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக