ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

பிள்ளை'யார்'என்பது ஏன்?

          பிள்ளை'யார்" என்பது ஏன்?
            🌀 கணபதி, கணேஷன், மூம்மூர்த்தி என்று பல பெயரில் அழைக்கப்படும் விநாயகருக்கு பிள்ளையார் என்று பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
            🌀 பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று தெரியும். ஆனால், இவரை 'யார்" என்ற மரியாதைச் சொல் சேர்த்து அழைக்கிறோம்.
            🌀 தந்தையை 'தந்தையார்" என்றும், தாயை 'தாயார்" என்றும், தமையனை 'தமையனார்" என்றும், அண்ணியை 'அண்ணியார்" என்றெல்லாம் மரியாதையுடன் அழைக்கலாம். ஆனால், நம் வீட்டுப் பிள்ளைகளை 'பிள்ளையார்" என்று அழைப்பதில்லை.
            🌀 அந்த மரியாதை, விநாயகருக்கு மட்டுமே தரப்படுகிறது. காரணம் அவர் பார்வதி, பரமேஸ்வரன் என்ற பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளை மட்டுமல்ல.
           🌀 சிவன் பார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்பதாலும் தனக்கு மேல் கருணை, பலம், புத்திக்கூர்மை, காரியசக்தி, அன்புள்ளம் கொண்டவர் எவருமில்லை என்று தனது அருளின் மூலம் நிரூபித்த காரணத்தால், 'பிள்ளையார்" என பெருமையுடன் போற்றப்படுகிறார்.
           🌀 அனைவர் வீட்டு பிள்ளையாக கருதும் பிள்ளையாரின் மீது அன்பு வைத்த அனைவருக்கும் அவர் எப்போதும் அருளாசி வழங்குவார்.
            அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக