செவ்வாய், 17 நவம்பர், 2015

நான் ஆத்மா

அறிவை இடைவிடாமல் கையாள்வதால் அறியாமை அகல்கிறது. விவேகத்தை விடாமல் கையால்வதற்கு யோகவழிகள் உண்டு,
நான் ஆத்மா
நான் அந்தகரணங்கள் அல்ல
நான் உடல் இல்லை
நான் ஐம்பெரும் கோசங்கள் இல்லை
நான் பிரம்மமாக இருக்கிறேன்
(அஹம் பிரஹ்மாஸ்மி)
ஓங்காரத்தில் இருந்து தான் அந்த ஓங்கார வடிவம் (உ)போன்ற அமைப்பு உடையது.
குணமானது விளக்கம் உடையதாகவும் விளங்கப்படாததாகவும், வடிவம் உள்ளதாகவும் இல்லாததாகவும் உள்ளது.
      (1) குணம் என்பது முக்குணமே ஆகும். இயல்பு, தன்மை,நிறம் என்பது கூடக் குணம் என்று பேசப்படும். சுவைகள் யாவும் சத்துவ- ராஜஸ - தாமஸ குணங்களின் விரிவே ஆகும்.
      (2) யோக மார்க்கமும் இந்தியாவின் பல்வேறு சமயங்களும் சாக்கிய கொல்கையை ஓரளவு அல்லது முழுவது‌ம் ஏற்றுக் கொண்டே இருக்கின்றன, ஆகவே அதை அறிவோம்.
      (3) அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்' என்ற கருத்தோடு சாங்கிய நூல் கூறுவன எல்லாம் தன் உடலால் உணரக் கூடியனவேயாம். அதனால் பல சமயங்களும் இக்கொள்கையை இந்தியாவில் ஏற்றுள்ளன.
       (4) பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானவை (சமஷ்டி) தொகுதி என்றும், எல்லா உயிர்களுக்கும் தனித்தனியாக உள்ள அதே பொருள் (வியஷ்டி) விகுதி என்று கூறப்படும்.
       (5) புருஷன்          மூலப்பகுதி
    (பரமாத்மா)      (மூலப்பிரக்கிருதி)
                                ஆத்மா முக்குணக்கலப்பு
                                (அவ்யக்தம் வெளிப்படாதது )
                                முக்குணப் பிரிப்பு
                                (வியந்தம் வெளிப்படுவது)
                                 அகங்காரம்
                                 மஹத் (புத்தி)
                                 (சித்தம்) மனம்
                                 தன்மாத்திரைகள்
                                இந்திரியங்கள்
                                 பஞ்சபூதங்கள்
                                 உடல்
                                  பிரபஞ்சம்
இப்படி ஒன்றிலிருந்து ஒன்று உண்டானதை இது காட்டுகிறது.
      (6) கடவுள் தன்மையுடைய பிரம்மம் -புருஷன் -ஆத்மா என்று தனித்தனியே உள்ளன. இவற்றைச் சில சமயங்கள் சுத்தப்பகுதி என்று கூறும்.
        (7) கடவுளுடன் ஓரளவு தொடர்பு மட்டுமே கொண்டுள்ள இப்பகுதி மூலப் பிரகிருதி முதல் அண்டம் பிண்டம் வரை விரிந்த பகுதியாகும்.
       (8) இவையெல்லாம் மனத்தால் உணரக்குடியவை; மேலும் (சமஷ்டி) தொகுதி (வியஷ்டி)  விகுதியாக உள்ளவை. அகங்காரம் எல்லாக் குணங்களோடும் கலந்தது போல் யாவற்றுக்கும் பொதுவாக உள்ள அகங்காரம் என்பது (சமஷ்டி)  தொகுதியாம் ; இதன் அணு அளவு உயிர்கள் ஒவ்வொன்றிலும் இருப்பது (வியஷ்டி) விகுதியாம்.
         (9) மஹத் அதாவது புத்தி -புத்தி என்பது பிரபஞ்சம் தழுவியதாகையால் மஹத் (பெரியது) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபஞ்சம் உண்டாகவும் அது காக்கப்படவும் அழிக்கப்படவும் பயன்படும் புத்தி சமஷ்டி மஹத் என்றும் உயிர்களுக்கு இதில் அணு அளவாகப் தரப்பட்டது வியஷ்டி என்றும் கூறப்படும்.
பிரபஞ்சத்தை அறிவினால்தான் படைத்திருக்க முடியும். ஏன் என்றால் பிரபஞ்சப் பொருள்களின் அமைப்பில் மாபெரும் அறிவு அடங்கித் தொழில்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே வடிவமற்ற அறிவு வடிவமுள்ள பிரபஞ்சத்தையும் உடல்களையும் உண்டாக்கி இருக்கிறது.
         இதே பிரபஞ்சம் முழுவதையும் யோகம் செய்பவன் தன் அறிவின் எல்லைக்குள் மனம் சித்தம் என்ற பகுதிகளுக்குள் அடக்க முடியும். ஆகையால் வடிவமுள்ள பிரபஞ்சம் வடிவமற்ற புத்திக்குள் அடங்குகிறது.
        இதனாலேயே எந்த புத்தி படைப்புத் தொழிலைச் செய்ததோ அதே புத்தியின் அணு அளவு நம்மிடம் இருப்பதால் தான் விரிவான பிரபஞ்சத்தை அதற்குள் அடக்க முடிகிறது.
        ஒரு துளி பணிக்குள் ஒரு பெரிய வானமும் இயற்கைக் காட்சிகளும் அடக்கமாகத் தெரிவது போன்றது இது.
         கடவுளை ஒத்துக் கொள்ளாதவர்கள் இந்த படைப்பு இயற்கையாக நிகழ்ந்தது அதை ஆராயும் போது அறிவு நமக்கு உண்டாவதாகவும் கூறுவர். அதாவது வடிவத்தில் இருந்து வடிவமற்ற அறிவு வருவதாக கூறுவர்.
        (10) சாங்கியத்தின் படி புத்தியும், ஜடமான ஒரு கல்லும், மண்ணும் ஒரு பொருளாகவே கருதப்படுகிறது. அதனால் தான் ஜடப்பொருள்களால் சூழப்பட்ட பிரபஞ்சம் சுருட்டப்பட்டு நம் உள் மனத்தில் வைக்கப்படுகிறது.
         (11) எல்லாம் சூக்கும நிலையில் இருந்து தூல நிலைக்கு வருவதையும் சூக்கும தியானத்தால் நாமே உணர முடியும்.
          (12) புருஷன் எனப்படுவது அழிவற்றது, எதனாலும் உண்டாக்கப் படாதது, அமிர்த வடிவானது, தூயது. இதன் அணுத்தன்மையே நம் ஆன்மாவாகும். (சீவாத்மா)
          (13) எல்லாப் பொருள்களிலும் முக்குணம் பரவி இருப்பதைச் சாங்கியம் கூறுகிறது.
          (14) சாங்கியத்தின் இக்கொள்கை எல்லாச் சமயங்களுக்கும் பொது. ஆகவே அதை உணர்ந்தால் தான் யோக முயற்சி சிறப்பாக வளரும்.
          (15) தான் கடவுளின் ஒரு பகுதி என்றும் பிரபஞ்சம் முதல் உடல் வரை தனக்கு அந்நியம் என்றும் உணரும் போது தானாகவே சமாதி நிலை உண்டாகும்.
           இதை உணர இதைவிடச் சிறந்த தத்துவக் கொள்கை இல்லை. இவை என்னிக்கையால் 24 ஆகு‌ம்.
             தன்மாத்திரைகள்
             (நுண் பூதங்கள்)____5
             பஞ்சபூதங்கள்
             (பருவடிவம்) _______5
              ஞானேந்திரியம்___5
              கர்மேந்திரியம் ____5
             அந்தக்கரணம் _____4

   மொத்த தத்துவங்கள்     24 
                           தொடரும்.......

சனி, 31 அக்டோபர், 2015

ஏழகோடி மந்திரம் என்றால் என்னவென்று கான்போம்.

அன்பு ஆத்மாக்களுக்கு வணக்கம். மந்திரங்கள் ஏழ கோடி உள்ளது என்று நூல்கள் கூறுகின்றன. அவை யாவும் ஏழ செயல்களில் முடிவில் வரும், 1.(நம) 2.(சுவாதா) 3.(சுவாகா) 4.(வௌஷட்) 5.(ஹூம்) 6.(வஷட்) 7.(பட்) என்ற இறுதி சொற்களே ஏழகோடி மந்திரம் எனப்படுகிறது. ஆதாரம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்ற நூல் கூறுகிறது.
மந்திரங்கள் பலவகை, அவைகள் தலைமையால் 71 வகையாகச் கூறப்படுகிறது. அவற்றிலும் சிறந்தவை :
(1)மூல மந்திரம் (2)பீஜா மந்திரம் (விதை மந்திரம்)(3)பஞ்ச மந்திரம் (4)சடங்க மந்திரம் (5)சம்ஹிதா மந்திரம் (6)காயத்ரி மந்திரம் (7)அஜபா மந்திரம் (8)பிராணப் பிரதிஷ்டா மந்திரம் (9)அஷ்டகர்ம மந்திரம் (10)பஞ்ச கிருஷ்திய மந்திரம் (11)ஏகாட்சர மந்திரம் (12)திரியட்சரி மந்திரம் (13)பஞ்சாட்சர மந்திரம் (14)சடாட்சர மந்திரம் (15)அட்டாட்சர மந்திரம் (16)நவாட்சரி மந்திரம் (17)பஞ்சதசாட்சரி மந்திரம் (18)பிரசாத மந்திரம் (19)நியாச மந்திரம் (20)கவச மந்திரம் (21)உபதேச மந்திரம் (22)தனித்தனித் தெய்வ மந்திரம் (23)எல்லா பொருள்களுக்கும் உரிய அதிதேவதை மந்திரம்.
என பல்வேறு மந்திரம் உள்ளது
மந்திரத்திற்கு வலிமை உள்ளது.
மந்திரத்தால் அழைத்திடவே வானவரும் வந்திடுவர்
மந்திரத்தால் வசிகரண முதல் வலிகள் வந்துஎய்தும்
மந்திரத்தால் ஆக்கிஅளித்து அழித்திடலும் ஆக்கியிடும்
மந்திரத்தின் வலியவர்காண் வானவரும் மானவரும்.
(தத்துவ நிசாத யோகசாரம். அத்தியாயம் 75:282)

ஆக்ஸிஜன் (Oxygen) தேவை எவ்வளவு

ஒரு நாளில் ஒரு மனிதன் சுவாசிக்கின்ற உயிர்க்காற்று (Oxygen) மூன்று பிராணவாயு சிலிண்டர்களுக்கு சமமானது. ஒரு பிராணவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாய். ஒரு நாளுக்கு தேவை 2,100 ரூபாய் ஒராண்டுக்கான இதன் மதிப்பு ரூபாய் 7,66.500 /.
சராசரி ஆயுள் 65 ஆண்டுகளுக்கு தேவைப்படும் பிராணவாயுவின் மதிப்பு 5,00,00,000 ரூபாய்! இவ்வளவு மதிப்புமிக்க உயிர் காற்று எங்கிருந்து வருகிறது? நம்மைச் சுற்றியுள்ள மரங்களில் இருந்து வருகிறது! ஓர் அரச மரம் தன்னை சுற்றி 500 மீட்டர் தூரம் வரை காற்றை தூய்மை செய்து, பிராணவாயுவை தரும் வல்லமை படைத்தது. அதனால்தான் நம்முன்னோர்கள் காக்கும் கடவுள் விஷ்ணுவின் அம்சமாக கருதினார்கள். வேப்பமரம் அம்மன் இருக்கும் இடம் என்றும். ஆலமரம் ஐய்யனார் இருக்கும் இடமாகவும், இப்படி நமக்கு ஆக்ஸிஜன் தரும் மரங்களை காக்க வேண்டும் என்று தெய்வத்தன்மை உடையதாகவும். கரியமில வாயுவை தரக்கூடிய புளியமரம் போன்ற மரங்களை பிசாசுகள் தங்கும் மரம் என்று கூறியுள்ளனர். நம்மில் மிக சிலருக்கு மட்டும் மரங்களின் மதிப்பு தெரிகிறது எல்லாருக்கும் எப்போது விழிப்புணர்வு வரும். மண்ணை நேசிப்போம் மரங்களை நட்டு மக்களை காப்போம்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

கவிச்சக்கரவர்தி

(1)கம்பரின் தகப்பனார், ஆதித்தன்
(2) தாயார்,    திலகவதி
(3) பிறந்த ஊர், தேரழந்தூர்.
(4) பிறந்த காலம்,    கிருஷ்.பின்,840-920
(5) ஆரம்ப கல்வி -தேரழந்தூரில்,
(6) பாண்டித்யம் பெற்றது, -சென்னை திருவொற்றியூர்.
(7) புரவலர், -சடையப்ப வள்ளல்
(8) மனைவி பெயர், -நிகர்த்தவல்லி (சதுரானனபண்டிதர் மகள்)
(9) திருமணம் நடந்த இடம் -மயிலாப்பூர்,
(10) முன்னிலை -திருவாலி அமுதனார்.
(11) பிறந்த மக்கள் -அம்பிகாபதி, காவேரி.
(12) அம்பிகாபதி பிறந்தது -காஞ்சி அம்பியில்,
(13) கம்பர் வாழ்திருந்த மாளிகை - தேரழந்தூர் -அம்பி
(14) முதல் அரங்கேற்ற நூல் - ஏர் எழபது திருக்கை வழக்கம்.
(15) முன்னிலை - முதலாம் ஆதித்த சோழர், சடையப்பர்.
(16) இடம் -காஞ்சியில்
(17)இராமாயணம் தொடக்கம் -வெண்ணெய் நல்லூர் இறுதியாக எழிதிமுடித்தது திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் காளி சன்னதியில்.
(18) இராமாயணம் அரங்கேற்றம் -திருவரங்கம் தாயார் சன்னதி எதிரில். ஸ்ரீ மத் நாதமுனிகள் முன்னிலையில் கிருஷ், பி. 823-918
(19) கம்பர் பூஜை செய்த கோவில்கள் -தேரழந்தூர் காளிக்கோயில் மற்றும் பாலசேத்திரபுரம் (காளி) இந்த காளிதான் இவருக்கு கவி அருளினார்.
(20) இறுதிக்கட்டத்தில் வாழ்ந்தது -சேரமன்னன் தாணுரவி அரண்மனை பத்மநாபபுரம் கோட்டை (முதல் ஆதித்தன் சம்பந்தி)
(21)கம்பர் தன்னுடன் கொண்டு வணங்கி வந்த சரஸ்வதி சிலை ஐம்பொன்னாலானது ஓரடி சிலை சரஸ்வதி அந்தாதி இயற்சியதும் -பத்மநாபபுரம் கோட்டையில் தாணுரவி சரஸ்வதி ஆலையம் கட்டி இன்றளவும் பிரசித்தி பெற்று வருகிறது.
(22) கம்பர் இயற்றிய நூல்கள் - 1.இராமாயணம், 2. நாலாயிரதிவ்யப் பிரபந்தம் பாசுரம், 3. சரஸ்வதி அந்தாதி, 4.இலக்குமி அந்தாதி, 5. சடகோபர் அந்தாதி, 6. ஏர் எழபது, 7. திருக்கை வழக்கம், 8. காஞ்சிபுராணம், 9. காஞ்சி பிள்ளைத்தமிழ், 10. காஞ்சிக்குறவஞ்சி, 11. செம்பொற்சிலை எழபது, 12. மும்மணிக்கோவை, 13. சோழர் குறவஞ்சி, 14.தனிப்பாடல்கள், 15.இராமாயணம் உரைநடை, 16.தமிழ் அகராதி.
(23)கம்பர் சமாதி -நாட்டரசன் கோட்டையில்
(24)கம்பர் கோட்டம் தேரழந்தூர், மணிமகுடம் காரைக்குடி
(24). 5-4-1966 ல் கம்பர் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
(25) கம்பருக்கு அளிக்க பட்ட விருதுகள் -அபிநவ கவிநாதன், கவிச்சக்கரவர்தி, கந்பநாட்டாழ்வார். கம்பர் உவச்சர் குலத்தில் தோன்றியவர்.

செவ்வாய், 19 மே, 2015

திருவள்ளுவர். திருக்குறள்

திருக்குறளில் அடியவனின் சிறு ஆய்வு (1)திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
(2)திருக்குறளில் பயன்படுத்த படாத உயிரெழுத்து _ஔ.
(3)இரண்டு முறை வரும் ஒரே அதிகாரம் _குறிப்பறிதல்.
(4)அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து _னி
(5)திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்து _ள்,ங.
(6)திருக்குறளில் பயன்படுத்த படாத இரு சொற்கள். தமிழ் _கடவுள்.
(7)திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள். 14000.
(8)திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள், 42194. (9)திருக்குறளில் தமிழ் எழுத்தில் 247ல் 37 எழுத்துகள் பயன்படுத்த வில்லை.
(10)திருக்குறளில் 46 குறளில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
(11)திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரண்டு மலர்கள் குவலை, அனிச்சம்.
(12)திருக்குறளில் இடம்பெற்றுள்ள பழம் நெருஞ்சில்.
(13)திருக்குறளில் இடம் பெற்றுள்ள விதை குன்றிமணி.
(14)திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட இரண்டு மரங்கள் மூங்கில் பனைமரம்.
(15)திருக்குறளில் பத்து அதிகாரங்கள் உடமை என்று கூறியுள்ளார்.
(16)திருக்குறளில் ஏழு என்ற எண்ணிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
(17)திருக்குறள் உலக அறநூல்களில் முதன்மையானது.
(18)திருக்குறள் பதிணொன்கீழ்கணக்கில் ஒன்று.
(19)திருக்குறள்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் நியூபோப்.
(20) திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் மொழிபெயர்க்க பட்டது.
(21)திருக்குறளில் 120 க்கு மேல் உவமைகள் கூறியுள்ளார்.
(22)திருக்குறள் மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 இல் பதிப்பித்து முதல் முறையாக தஞ்சையில் வெளியிடப்பட்டது.
(23)தொடிற்கடின் அல்லது காமநோய் போல
விடிற்கடின் ஆற்றுமோ தீ (1159)என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்து உள்ளது.
(24)திருக்குறள் முதல் முறையாக உரை எழுதியவர் _மணக்குடவர். பத்தாவது உரை ஆசிரியர் பரிமேலழகர்.
(25)திருக்குறளில்  கோடி என்ற சொல் ஏழு இடங்களில் உள்ளன. எழபது கோடி என்ற சொல் ஒரே குறளில் இடம்பெற்றுள்ளன.
(26)திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் கிடைக்கிறது.
(27)திருக்குறளில் அனிச்சம் மலர் நான்கு முறை, யானை எட்டு முறை, பாம்பு மூன்று முறை, இடம்பெற்றுள்ளன.
(28)திருக்குறளில் கடவுள் என்னும் சொல்,கடவுள் வாழ்த்து, என்னும் அதிகாரத்தில் பயன்படுத்த இல்லை.
(29)திருக்குறள் கடவுள் வழிபாட்டால், உள்ள நன்மை, 1.எல்லா உலகிற்கும் மேலதாய வீட்டுலகில் வாழலாம். 2.மனிதனை வருத்தும் துன்பங்கள் அவனைப் பற்றி.3.நல்வினை தீவினை உளவாகா. 4.பிறப்பறுத்து எல்லா காலத்திலும் ஒரே தன்மையாராய் வாழலாம்.
(30)திருக்குறள் இறை வழிபாடு தவறுதலால், 1.மனக்கவலையாய் எழும் துன்பங்கள் நீங்கா. 2.பிறப்பெனும் பெருங்கடலைக் கடக்க இயலாது. 3.ஐம் பொறிகள் இருந்தும் அவை பயனற்றனவாகவே இயங்கும்.
(31)திருக்குறளில் கடவுளை, 1.ஆதிபகவன் :முதன்மையாக நிற்கும் முழுமுதற்பொருள். 2.வாலறிவன் :தூய அறிவினன். 3.மலர்மிசை ஏகினான் :அன்பான் நினைவார் இதயகமலத்தில் விரைந்து வந்து தங்குபவன். 4.வேண்டுதல் வேண்டாமை இலான் :விருப்பு வெறுப்பு அற்றவன். 5.ஐந்தவித்தான் :ஐம்புலனால் எழும் ஐந்து அவா வினையையும் அடக்கியவன். 6.தனக்குவமை இல்லாதான் :உவமையால் விளக்க முடியாதபடி உயர்ந்துள்லவன். 7.அறவாழி அந்தணன் :அறக்கடலாக விலங்குபவன். 8.எண்குணத்தான் :எண்ணத்தக்க குணங்களை உடையவன் (அல்லது) எட்டு வகையான குணங்களை கொண்டவன். இவ்வாறு பல பெயர்களில், இறைவனை கூறுகிறார்.
(மீண்டும் ஆய்வோம்)

வெள்ளி, 8 மே, 2015

அம்மா, அம்மா, அம்மா,

ஒலியே எழுத்தின் தந்தை, ஒலித்திறள் வெவ்வேறு எழுத்துக்களாக, வடிவெடுப்பதை தொல்காப்பியர்.
உந்தி முதலா முந்துவெளி தோன்றித்
தலையினும் மிடற்றிலும் நெஞ்சிலும் நிலை இப்
பல்லும் இதழம் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்பற்றமைய நெறிப்பட நாடி.(தொ,கா,எ,83)
தொப்புளிலிருந்து மேலே கிளர்கின்ற ஒளிக்காற்று நெஞ்சு, மிடறு, தலை, ஆகிய இடங்களில், நிலைகொண்டு. பல்,இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம், என்னும் உறுப்புகள் வழியாக வரும் ஒளியால் வெவ்வேறு எழுத்துக்களாக பிறக்கும். அப்படி வந்த எழுத்துகள் உயிர் தத்துவம் பெற்ற வார்த்தை தான் அம்மா, சொல்லும் போதே எத்தனை சுகம்பெருகிறது மணம். இந்த தமிழ் வார்த்தை எப்படி இருக்குகறது அனுபவித்து பாருங்கள். உடலுக்கு துன்பம் வந்தால் தன்னை அறியாமல் வெளிப்படும் வார்த்தை. சரி தமிழன் ஏன் இந்த வார்த்தையை மட்டும் தேர்வு செய்தான். உயிர் கொடுத்தவல் அம்மா, ஆகவே தமிழ் எழுத்தில் முதல் உயிர் எழுத்து, அ, தேர்வு செய்தான், உயிர் வளர மெய்,(உடல்)தேவை
எனவே, ம்,என்னும் மெய்யெழுத்தும் பத்து மாதம் கழித்து உயிர் +மெய் இரண்டையும் சேர்த்து உலவவிடுவதால் உயிர்மெய் எழத்தான, மா, என்னும் எழுத்தையும் சேர்தனர். இப்படி தான் தமிழன் தத்துவத்தின் அடிப்படையில் வார்த்தைகள் உருவகம் ஆனது. இது போல் அப்பா என்ற சொல்லும் உருவானது அதனைப் பற்றிய தகவல் பிறகு எழுதுகிறேன். அம்மா மென்மையானவர், மெல்லினத்திலும், அப்பா வன்மையாவர், என்பதால் வல்லினத்திலும், அமைத்தனர்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

யோகம் என்பது என்ன

இவ்வாறு, இடகலையாகிய சந்திரனில் நடந்தாலும், பிங்கலையாகிய சூரியனில் நடந்தாலும் சரம் ஐம்பெரும் பூதங்களில் பாய்ந்தே நடக்கும். அவற்றின் குறிக்கோளாவது.பிருத்திவியில் 1.1/2 நாழிகை மூக்குத்துளையில் வாழும் வாயு, மூக்குத்தண்டில், தாக்கிக்கொண்டும் _அப்புவில், 1.1/4 நாழிகை கீழ் பக்கமாய் இறங்கியும் _தேயுவில் 1 நாழிகை மேற்பக்கமாய் ஏறியும் _வாயுவில் 3/4 நாழிகை மூக்குதண்டுக்கு அருகேயும் _ஆகாயத்தில் 1/2 நாழிகை எதிலும் படாமல் நேராகவும், ஆக மொத்தம் ஐந்து நாழிகை ஓடும். இதன் அடிப்படையில் அமையும் வாழ்நாள் விபரம் அடுத்து வரும்.

யோகம் என்பது என்ன பாகம் எண் 3

கலவியில் இடகலையிலோ,பிங்கலையிலோ பிரித்திவி முதல் ஐந்து பூதங்களிலும் சரம் செல்லுமாயின் அவ்வமயம் கருவில் தோன்றும் குழந்தையின் வயது 100 _ஆண்டுகள் எனவும், _அப்புமுதல் நான்கு பூதங்களிலும் சரம் சென்றால் குழந்தையின் வயது 70 (சில நூல்கள் 80) ஆண்டுகள் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஐந்து நாழிகையில் உயிர்காலானது இடம் வலம் மாறும் நாழிகை 1 க்கு _20 மாவும் ;மா_1 க்கு 1 ஆண்டுமாகும். இங்ஙனமாயின் ஐந்து நாழிகைக்கு 20 *5 =100 மா (ஆண்டு) ஆகு‌ம். எனவே பிருதிவியை 1.1/2 நாழிகை நீக்கிவிட்டுப் பார்க்க 20*3.1/2 =70 ஆண்டுகள் கிடைக்கும். ஆயினும் இரேசக பூரமாகமாக செல்லும். சரத்தின் வகைகளை ஆராய்ந்து அறிந்து, விதிப்படிப் பழகி சரம் செல்லும் வழியில் செல்லுகின்ற யோகவழக்கம் உள்ளவர்கள், தன்விருப்பப்படி, ஏற்றலும், இறக்கலும், மாற்றலும், அவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்காக,வாழ்தலும், வெளியில் பாய்ந்து செல்லும் தொழில்கள் கைகூடும். சித்தர் பெருமக்கள் இச்சரத்தை தன்வயப்படுத்தி தங்களது வாழ்நாளைப் பெருக்கிக்கொண்டனர்.

வியாழன், 12 மார்ச், 2015

காமதேவன் புராணம்

சிவார்ப்பணம் :கந்தபுராண வரலாற்றில் முதல் காலகட்டத்தில், பிரம்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தட்சன் என்பவர். தன்சகலகலைகளையும் தன் தந்தையார் பிரம்மாவிடத்தில், 
கற்றார் பிறகு தந்தையே, உலகின் முழுமுதற் கடவுள் யார் என்று கேட்டார். அதற்கு பிரம்மா, சிவபெருமான் தான் அகிலவுலகத்திற்க்கும் தன்னிகரற்ற தெய்வம் என்று கூறினார். இதையடுத்து தட்சன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார், தவத்திற்கு இறங்கி சிவபெருமான். தட்சனே உணக்கு என்னவரம் வேண்டும் என்று கேட்டார். தட்சன் சிவபெருமானை வணங்கி ஐயனே உண்மனைவியான, உமாதேவி எனக்கு மகளாக பிறக்க வேண்டும் அகில உலகையும் நான் ஆட்சிசெய்யவணடும் தேவர் மூவர் யாவரும் எனக்கு கீழ் படிந்து நடக்கவேண்டும். என்று கேட்டார் கருணை தெய்வம் அப்படியே வரம் தந்துவிட்டார். அதன்பிறகு ஒரு நாள் நீராடி திரும்பும் போது ஓர் வலம்புரி சங்கை கண்டான். அதைக் கையில் எடுக்க ஓர் அழகான பெண் குழந்தையாக மாற அம்பிகையே மகளாக வந்த சந்தோஸத்தில் வாரிஎடுத்து உச்சி முகர்ந்து தன் மனைவியிடம் கொடுத்து வளர்த்து வந்தார் தாட்சாயனி என்ற பெயரில். ஏன் தட்சன் மகளல்லவா, பருவத்தை தாட்சாயனிக்கும் சிவபெருமானை மணம்பேசி முடித்து திருமணம்த்திற்கு தேவாதி தேவர்கள் பிரம்மா விஷ்ணு உருத்திரர் எல்லாம் ஒன்று கூடி நின்று தாட்சாயனிக்கு திருமண சடங்குகள் நடந்தன அப்போது தாரவார்கும் நிகழ்ச்சி, எப்போதும் கொடுப்பவர் கை மேலும் வாங்குபவர் கை கீழ் இருக்கும், இந்த இடத்தில் தட்சன் நினைத்தான் ஆஹா ஈசனே என்னிடம் யாசிக்கின்றான் என்று கர்வம் கொண்டான், அடுத்த கணம் ஈசன் மறைந்து விட்டார். (தொடரும்) 2 ல்