செவ்வாய், 19 மே, 2015

திருவள்ளுவர். திருக்குறள்

திருக்குறளில் அடியவனின் சிறு ஆய்வு (1)திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
(2)திருக்குறளில் பயன்படுத்த படாத உயிரெழுத்து _ஔ.
(3)இரண்டு முறை வரும் ஒரே அதிகாரம் _குறிப்பறிதல்.
(4)அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து _னி
(5)திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்து _ள்,ங.
(6)திருக்குறளில் பயன்படுத்த படாத இரு சொற்கள். தமிழ் _கடவுள்.
(7)திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள். 14000.
(8)திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள், 42194. (9)திருக்குறளில் தமிழ் எழுத்தில் 247ல் 37 எழுத்துகள் பயன்படுத்த வில்லை.
(10)திருக்குறளில் 46 குறளில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
(11)திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரண்டு மலர்கள் குவலை, அனிச்சம்.
(12)திருக்குறளில் இடம்பெற்றுள்ள பழம் நெருஞ்சில்.
(13)திருக்குறளில் இடம் பெற்றுள்ள விதை குன்றிமணி.
(14)திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட இரண்டு மரங்கள் மூங்கில் பனைமரம்.
(15)திருக்குறளில் பத்து அதிகாரங்கள் உடமை என்று கூறியுள்ளார்.
(16)திருக்குறளில் ஏழு என்ற எண்ணிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
(17)திருக்குறள் உலக அறநூல்களில் முதன்மையானது.
(18)திருக்குறள் பதிணொன்கீழ்கணக்கில் ஒன்று.
(19)திருக்குறள்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் நியூபோப்.
(20) திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் மொழிபெயர்க்க பட்டது.
(21)திருக்குறளில் 120 க்கு மேல் உவமைகள் கூறியுள்ளார்.
(22)திருக்குறள் மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 இல் பதிப்பித்து முதல் முறையாக தஞ்சையில் வெளியிடப்பட்டது.
(23)தொடிற்கடின் அல்லது காமநோய் போல
விடிற்கடின் ஆற்றுமோ தீ (1159)என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்து உள்ளது.
(24)திருக்குறள் முதல் முறையாக உரை எழுதியவர் _மணக்குடவர். பத்தாவது உரை ஆசிரியர் பரிமேலழகர்.
(25)திருக்குறளில்  கோடி என்ற சொல் ஏழு இடங்களில் உள்ளன. எழபது கோடி என்ற சொல் ஒரே குறளில் இடம்பெற்றுள்ளன.
(26)திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் கிடைக்கிறது.
(27)திருக்குறளில் அனிச்சம் மலர் நான்கு முறை, யானை எட்டு முறை, பாம்பு மூன்று முறை, இடம்பெற்றுள்ளன.
(28)திருக்குறளில் கடவுள் என்னும் சொல்,கடவுள் வாழ்த்து, என்னும் அதிகாரத்தில் பயன்படுத்த இல்லை.
(29)திருக்குறள் கடவுள் வழிபாட்டால், உள்ள நன்மை, 1.எல்லா உலகிற்கும் மேலதாய வீட்டுலகில் வாழலாம். 2.மனிதனை வருத்தும் துன்பங்கள் அவனைப் பற்றி.3.நல்வினை தீவினை உளவாகா. 4.பிறப்பறுத்து எல்லா காலத்திலும் ஒரே தன்மையாராய் வாழலாம்.
(30)திருக்குறள் இறை வழிபாடு தவறுதலால், 1.மனக்கவலையாய் எழும் துன்பங்கள் நீங்கா. 2.பிறப்பெனும் பெருங்கடலைக் கடக்க இயலாது. 3.ஐம் பொறிகள் இருந்தும் அவை பயனற்றனவாகவே இயங்கும்.
(31)திருக்குறளில் கடவுளை, 1.ஆதிபகவன் :முதன்மையாக நிற்கும் முழுமுதற்பொருள். 2.வாலறிவன் :தூய அறிவினன். 3.மலர்மிசை ஏகினான் :அன்பான் நினைவார் இதயகமலத்தில் விரைந்து வந்து தங்குபவன். 4.வேண்டுதல் வேண்டாமை இலான் :விருப்பு வெறுப்பு அற்றவன். 5.ஐந்தவித்தான் :ஐம்புலனால் எழும் ஐந்து அவா வினையையும் அடக்கியவன். 6.தனக்குவமை இல்லாதான் :உவமையால் விளக்க முடியாதபடி உயர்ந்துள்லவன். 7.அறவாழி அந்தணன் :அறக்கடலாக விலங்குபவன். 8.எண்குணத்தான் :எண்ணத்தக்க குணங்களை உடையவன் (அல்லது) எட்டு வகையான குணங்களை கொண்டவன். இவ்வாறு பல பெயர்களில், இறைவனை கூறுகிறார்.
(மீண்டும் ஆய்வோம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக