ஞாயிறு, 3 ஜூலை, 2011

சிவார்ப்பணம்.

அன்பு ஆன்மாக்களாகிய உங்களை வணக்கத்துடன் சந்திக்கிறேன். மனித வாழ்வை தெரிந்து கொள்வோமா?

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு யானையின் ஆயுட்காலம் 1000 ஆண்டாக இருந்தது. நாயின் ஆயுட்காலம் 14 ஆண்டாக இருந்தது. ஆமையின் ஆயுள் 5000 ஆண்டாகவும், பாம்பின் ஆயுள் 100 ஆண்டாகவும் இருந்தது. மனிதனது ஆயுட்காலம் 120 ஆண்டுகளாக இருந்தது.

தற்போது ஆமை, பாம்பு, யானை, நாய் ஆகியவற்றின் ஆயுட்காலம் அப்படியே இருக்க, மனிதனின் ஆயுள் மட்டும் 60 ஆக குறைந்து போனது. இத்தனைக்கும் ஆயுளை அதிகப் படுத்த பலவித மருத்துவ வசதிகள் வேறு உள்ளன. ஏன் இப்படி ஆனது?

இன்றைய வளரும் நாடுகளின் மக்களில் அதிக ஆயுட்காலம் வாழக் கூடிய மக்கள் சீனர்கள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படியானால் சீனர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று பார்ப்போம். சீனர்கள் எப்போதும் இயற்கையோடு ஒன்றி இருப்பதை நாம் பார்க்கிறோம். உணவு, உடை, வசிக்கும் முறை என அனைத்திலும் அவர்கள் இயற்கையோடு தொடர்பு வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் பூமி பரப்பை எப்படி காத்தார்கள் என்பதற்கு சிறு உதாரணம்... சீன நாட்டின் மஞ்சள் ஆறு பற்றி நமக்கெல்லாம் தெரியும். அந்த நதியின் வெள்ளப் பெருக்கால் ஆண்டு தோறும் லட்ச கணக்கான மனிதர்களை சீனா இழந்தது. ஆனால் சீனாவின் துயரம் என்று அழைக்கப் பட்ட மஞ்சள் ஆறு இன்று, சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. சீனாவின் அறுபது சதவிகித நிலம், மஞ்சள் ஆறால் விளைகிறது. அப்படியாக அதனை பல கிளை நதிகளாகவும், கால்வாய்களாகவும் மாற்றியது அந்த தேசம். ஆக நில சக்தியை காக்க நீர் சக்தியை பரவலாக்கியதன் மூலம் தங்கள் நல சக்தியை எப்படி காத்தார்கள் என்பது நமக்கு தெளிவாகிறது. ஆகவே நீர் சக்தியால் நில சக்தியை கட்டுப்படுத்த முடியும் என்பதை சீனர்கள் மூலம் நாமும் உணர்வோம்.


(தொடரும்...)