திங்கள், 27 ஜூன், 2016

மகாலட்சுமி வரம் பெரவேண்டுமா!

              மகாலட்சுமி நிலைத்திருக்க பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை ! 
           மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறைப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள். தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள். இவள் “ஈம்” என்ற பீஜாட்சரத்தை உடையவள். இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள். இவளை வணங்குபவர்களை அனைத்தும் அருளும் மகாலட்சுமி நம் வீட்டில் நிலைத்திருக்க குடும்ப தலைவிகளான பெண்கள் கடைபிடிக்க வேண்டியவற்றை பற்றி இங்கு பார்ப்போம்.

     கடைபிடிக்க வேண்டியவை .

           ✯ பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும்.
         ✯ காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.
        ✯ விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது.
             ✯ நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
          ✯ வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.
         ✯ வெள்ளிக்கிழமை அன்று மாலையில் பணம் கொடுத்தல், வாங்குதல் மற்றும் ஊசி கடன் வாங்குதல் கொடுத்தல் போன்றவை செய்யக்கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரமலான் சிந்தனை உங்கள் கடமைகளை தவற விட்டு அடுத்தவர் மீது சுமத்தி பாவத்தை சுமக்காதீர்கள்.
         (அன்பு ஆத்மா த.சிவகிரி. ஓம் சிவார்ப்பணம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக