சனி, 18 ஜூன், 2016

வினாயகர் கோவில் அறிவோமா.!!

            இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்   முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். அப்படிப்பட்ட பிளையாரின் புகழ் பெற்ற கோயில்கள் எங்கெல்லாம் அமைந்துள்ளது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
              கற்பக விநாயகர் கோயில் : கற்பக விநாயகர் கோயில் அல்லது பிள்ளையார்பட்டி கோயில் என்று அறியப்படும் தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற விநாயகர் கோயில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.

           சித்தி விநாயகர் கோயில் : மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சித்தி விநாயகர் கோயில் 1801 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

          தொட்ட கணபதி கோயில் : பெங்களூரில் உள்ள பசவனகுடி எனும் பகுதியில், புகழ்பெற்ற காளைக்கோயிலுக்கு வெகு அருகில் தொட்ட கணபதி கோயில் அமைந்துள்ளது .
               கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில் : கொட்டாரக்கரா கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான கொட்டாரக்கராவில் ஸ்ரீ மஹாகணபதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்கப்பட்டு வந்தது.

              சுயம்பு கணபதி கோயில் : மகாராஷ்டிராவின் கணபதிபுலே நகரில் கரீபியன் கடற்கரை என்று அழைக்கப்படும் கணபதிபுலே கடற்கரையில் சுயம்பு கணபதி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் விசேஷமான அம்சம் என்னவென்றால் இங்குள்ள கணபதி சிலை மணற்பாறையில் தானே உருவானது.

          லக்ஷ்மிபூர் கணபதி கோயில் : அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வடக்கு லக்ஷ்மிபூர் நகரில் லக்ஷ்மிபூர் கணபதி கோயில் அமைந்துள்ளது.

             சாசிவேகாலு கணேசா : இக்கோயில் கர்நாடகாவின் சரித்திர புகழ் வாய்ந்த ஹம்பி நகரத்தில் ஹேமகூட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை கடுகுகளினால் பூசப்பட்டது போல் தோன்றுவதால் கடுகு கணேசா என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
         ஹோமத்தின் பலன்கள்
             கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

              சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.
(அன்பு ஆத்மா .த.சிவகிரி. ஓம்'சிவார்ப்பணம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக