புதன், 29 ஜூன், 2016

சுவாதிட்டானம் இரண்டாவது சக்கரம்

          நாபி (தொப்புள்)என்ற அடையாலம் இல்லாத மனிதன் உண்டா?எல்லா மனிதர்க்கும் தாயுடனான தொடர்புக்கு அடையாலம் நாபி.ஒரு பலூனை ஊதி கட்டிய மாதிரி வயிற்றுப் பகுதியில் இருக்கும் சரீர முடிச்சு நாபி.இதுவே பிரம்மகிரந்தி..,.அதுவே இரண்டாவது ஆதாரம் சுவாதிட்டானம் சக்கரம்.ஊழ் என்றாலே தொடர்ச்சி என்று பொறுள்.நமது பண்டையத் தொடர்புக்கான அடையாள முத்திரையே நாபி.இதனை 'தொழ்ப்பூழ்' என்றும் கூறுவார்கள்.

              மூலாதாரத்தில் உள்ள குண்லினி என்ற ஜீவசக்தி நாபிக்கு அருகில் நகர்ந்தால் வாழ்வில் சில மாற்றங்கள் வரும்.பசி,உணவு,வாய்ச்சுவை ஆகிய வயிறு சம்மந்தப்பட்ட வாழ்க்கைச் சுவை வரும்.நன்றாக சாப்பிட வேண்டும் விதவிதமாக சாப்பிட வேண்டும் .ருசிபேதம் வேண்டும்...இவையெல்லாம் சுவாதிட்டான இயக்கங்கள்.இதிலேயே நின்று விடாமல்.மூண்றாம் சக்கரமான.மணிப்பூரகத்தை நோக்கி முன்னேற வேண்டும்.சாப்பிடுவது தூங்குவது நடுநடுவே இவிருத்தி செய்வது என்ற செயல்கள்.மட்டுமே இருந்தால் மூலாதாரம்,சுவாதிட்டானம்.என்ற இரண்டு சக்கரங்களுக்கு இடையிலேயே இவர்கள் பயணப்படுகிறார்கள் என்று பொருள்.
               சாப்பாடு "அதற்கான ஏற்ப்பாடு- அதற்க்காக பெரும்பாடு-இல்லாவிட்டால் கூப்பாடு-இதுவே இவர்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் வட்டப்பயணம்.
                 விதவிதமாய் சமைத்து விரும்பி சாப்பிடுவது தவறில்லை.இது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.,...பாதி டீ வி சேனல்களை பெரும்பாலான பத்திரிகை பக்கங்களை ஆக்கிரமிப்பது சமையல் கலைதான்.உலகத்தின் பெருவாரியான உயிர்க்கூட்டத்தின் பெருங்கவலை,சாப்பாடுதான்! இதில் சிலபேர் ருசி விஷயத்தில் ஆபார கவணம் செலுத்துவார்கள்.
             அப்டியானால் சாப்பாட்டை ரசிக்கவோ! ருசிக்கவோ கூடாது என்கிறீரா என்று கேட்கிறீர்கள்? நான் அப்படி சொல்லவில்லை சாப்பாட்டு ருசி தெரியாதவனுக்கு கடவுளின் ருசி எப்படி தெரியும் எனவே ருசி அறிந்து மேல்நோக்கி அடுத்த சக்கரத்தை எட்டுவது நோக்கமானால் அந்தநிலையை விட்டால் தான் சாத்தியமாகும்.
            ருசியிலேயே இருந்தால் கடவுளை எட்டமுடியாது .
              எப்போதும் சாப்பாட்டு நினைப்வர்கள்.இரண்டாம் சக்கரமான சுவாதிட்டாத்திலேயே இருப்பராவர்,இப்படி உணவுப்பிரிர்களுக்கு கூடவே காமப்பசியும் மேலோங்கியே,இருக்கும் உடனே பிள்ளை பெரும் வேலைதான் நடக்கும்.
         ஏனென்றால் மூலாதாரம்,சுவாதிட்டானம் என்பதில் உழலும் வரை நாம் விலங்குகளே,..,.மணிப்பூரகம் என்கிற மூன்றாம் சக்கரத்தை நோக்கி நகர்ந்தால் தான் மனிதத்தன்மை வரும்.
           இந்த இரண்டாம் நிலையை சிலர் solar plexus  என்கிறார்கள்.தியானம் செய்யும் போது நம் கவனம் சுவாதிட்டானத்தில் வைத்தால் உதரவிதானத்திற்க்கு கீழே உள்ள முன்சிறுகுடல்,பெருங்குடல்,மலக்குடல்,சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் உடலளவில் செம்மையாகும்,புத்துணர்ச்சி பெரும்.
               இப்போதெல்லாம் மருத்துவர்கள் C,T,Scan,  M,R,I Scan என்று பார்க்கிறார்கள் எப்படி?  உள்ளுறுப்புகளை ஒரு திரையில் படமாகக் காட்டும் Scaner வந்து விட்டது.மருத்துவர்கள் உள்ளுறுப்புளை  Scaner கருவி கொண்டு பார்ப்பாது போல் நாம் நம் மனத்தாலே Scan செய்ய முடியும்!    ஆச்சரியமாக இருக்கிறதா?    முயற்சி செய் முடியும்.
            உள்ளுறுப்புகளில் வலி,சிக்கல் தோன்றினால் நன்றாக மேலே பார்த்து படுத்தவண்ணம்,அல்லது பத்மாசனம் இட்டமர்ந்து, நமது கவனத்தை அல்லது மனதை அந்த இடத்திற்க்கு அனுப்பலாம்.திரும்பத் திரும்பப் பழகினால் துல்லியமாக உடல் பிரச்சனைகளை உணரலாம்.தலாய்லாமாக்கள் இத்தகைய கலையில் வல்லவர்களாக இன்றும் உள்ளனர்.
              நாடித் துடிப்பை கவனித்து, இதயத்தின் அருகே காதை வைத்து உன்னிப்பாகக் கேட்டு, குருதி வெள்ளாமாய் கட்டுக்கடங்காமல்  பாய்வதை' கவிதை மாதிரி வர்ணித்தார் ஒரு லாமா.டாக்ர்கள் பரிசோதித்து இதயத்தில் அவருக்கு ஒரு வால்வு அடைத்து திறக்கும் சக்தியை இழந்து விட்டதாக கண்டறிந்தனர்.பசி,பசியின்மை, அமிலச் சுரப்பு, குடற்ப்புண், Gastric Ulcer, சிறு நீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள்  இரண்டாவது சக்கரத்தையும், முதல் சக்கராத்தையும் அதிகமாக வேலை வாங்கியவர்கள்.ஆனால் அதற்க்கு ஆற்றல் கொடுக்கத் தவறியவர்கள்.
           வாழ்க்கை முறையில் இவ்விரு சக்கரங்களை அதிகம் பயன் படுத்தியவர்கள் தியான முறையில் இவ்விருச் சக்கரங்களிலும் மனதை நிறுத்தினால் அதன் பழுதுகளில் இருந்து  வெளிவர முடியும்.தியானம் என்பது எந்த மதத்தையும் கடவுளையும் சார்ந்தது இல்லை.கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கூட தியானம் செய்ய முடியும்.
        அடுத்தச் சக்கரமான மணிப்பூரகம் போகலாம் வாங்க!    
       அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவிர்ப்பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக