ஞாயிறு, 1 ஜனவரி, 2017

திருக்குறள் : 1கடவுள் வாழ்த்து!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
         பரிமேலழகர் உரை :எழுத்தெல்லாம்   அகர முதல்.
         உலகு ஆதி பகவன் முதற்று.
         எழுத்தெல்லாம் (அ) கரத்தை முதலாக உடையன.
         அதுபோல் ஆதிபகவன் உலகுக்கு முதல் என்கிறார்.
          திருவள்ளுவர் கூற்றுப்படி (அ)கரம் எழுத்துக்கெல்லாம் (அ)கரம் முதல் என்கிறார்.இது எப்படி சாத்தியம், தமிழ் எழுத்துக்கு வேண்டுமானால், (அ)கரம் முதலாக இருக்கலாம் சமஸ்கிருதம், உள்ளிட்ட ஏனைய மொழிக்கு எப்படி (அ)கரம் முதலாகும். என்று ஏனைய மொழியோர் கேட்கின்றனர்.அப்படியானால் பொய்யாமொழிப் புலவர் பொய்சொல்கிறாரா இல்லை!!
            உலகில் மொழி மற்றும் எழுத்து சப்தத்தை வைத்துதான் உருவானது அப்படி . சப்தம் உருவாகும் நிலை என்பது ஒன்று இன்னொன்றோடு உரசினால் தான் சப்தம் உருவாகும்.அப்படியிருக்க எந்தவித உரசலும் இல்லாமல் உருவாகும், சப்தம்தான் (அ)கரம் அப்படியே வாயை திறந்தால் வரும் சப்தம்தான் (அ)கரம் இது வாயை திறந்தால் வருவதில்லை வாயைதிறக்க வரும் சப்தம்தான் (அ)கரம் அப்படி எந்தவித உரசலும் இல்லாமல் வரும் சப்தத்தை பல்வேறு இடங்களில் முட்டச்செய்ய பழகித்தான் மற்ற எழுத்துக்கள் உருவாயின, அப்படி ஏனைய எனையமொழிக்கும் முதல் சப்தத்திற்கும் முதல் (அ)கரம் மே முதல்.
         அப்படியானால் எழுத்தில் எப்படி (அ) கரம் எப்படி முதலாகும். உலகில் எழுத்துரு உருவாக நான்கு குறியீடுகளைப் பயன்படுத்தித்தான் உருவாக்கினர், எந்த மொழி எழுத்தும் அப்படித்தான்.அந்தக் குறியீடுகள் (1) சுழியம், (2) பிறைவடிவம்,(3)குறுக்குக்கோடு,(4)நெடுங்கோடு. இப்படி நான்கு குறியீடுகளை வைத்துத்தான் எழுத்துரு அமைக்கப்பட்டது. அப்படி ஏனையமொழிகளில் இந்தக் குறியீட்டில் இரண்டு அல்லது மூன்று குறிகளைக் கொண்டுதான்.உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் எழுத்தான (அ)கரம் நான்கு குறியீட்டையும் உள்ளடக்கிய எழுத்து (அ)கரம் எனவேதான் எழுத்தெல்லாம் அகரமுதல என்றார் வள்ளுவப் பெருந்தகை.
         அதுபொல உலகம் எல்லாம் இறைவனான ஆதி பகவனை முதலாக கொண்டுள்ளது என்று என்தமிழே உலக மொழிக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்.இந்தமொழியை பெருமை படவைத்த வள்ளுவப் பெருந்தகையை திருக்குறளை நம் சந்ததிக்கு சொல்ல கடமை பட்டவர்கள் தமிழர்களாகிய நாம்.
         வாழ்க செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழ்க பாரதம்.
        அன்புடன் ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக